PREVNEXT
முகப்பு / செய்தி / தமிழ்நாடு / திருப்பதியில் 1 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை கடத்த முயற்சி: தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கைது!

திருப்பதியில் 1 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை கடத்த முயற்சி: தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கைது!

இது பற்றிய தகவல் அறிந்த நாராயணவனம் போலீசார் திருப்பதி-சென்னை வழித்தடத்தில் உள்ள புத்தூர் அருகே அந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்

காட்சிப் படம்

காட்சிப் படம்

ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை கடத்தியதாக தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டிய இரண்டு பேர் அதை திருப்பதி வழியாக சென்னைக்கு காரில் கடத்தி சென்று கொண்டிருந்தனர். இது பற்றிய தகவல் அறிந்த நாராயணவனம் போலீசார் திருப்பதி-சென்னை வழித்தடத்தில் உள்ள புத்தூர் அருகே அந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் 25 செம்மர கட்டைகள் இருப்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் காரில் இருந்த ஒருவர் தப்பிஓடிவிட்டார். கார் ஓட்டுநர் ஆன திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மருதுசாமி வேலுசாமி என்பவரை கைது செய்த போலீசார் காருடன் செம்மரக்கட்டைகளையும் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரில் இருந்து தப்பி ஓடிய நபர் சேஷாசலம் வனப் பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி கடத்தி சென்னையில் இருக்கும் முக்கிய கடத்தல்காரர்களுக்கு விற்பனை செய்வதில் கை தேர்ந்தவர் என்று போலீசார் கூறுகின்றனர். இந்த சம்பவத்தில் கைப்பற்றப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் என்று போலீசார் தெரிவித்தனர்.

top videos
  • சென்னை வந்த அமித்ஷா - சாலையில் திடீரென விளக்குகள் அணைந்ததால் பரபரப்பு
  • பாதங்களை தொட்டு வணங்க கடமைப்பட்டிருக்கிறேன்: முதல்வர் ஸ்டாலின்
  • பாஜக தமிழ்நாட்டுக்கு என்ன கொடுத்தது தெரியுமா? பட்டியலிட்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின்
  • இயற்கை பொருட்களை கொண்டு 15 அடி நீளத்தில் மீன் பொம்மை.. பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க முயற்சி!
  • கோவை மக்களே பள்ளி உபகரணங்கள் வாங்கனுமா? இங்க வாங்க எல்லாமே கிடைக்கும்!
  • செய்தியாளர்: புஷ்பா

    Tags:Smuggling

    முக்கிய செய்திகள்