PREVNEXT
முகப்பு / செய்தி / புதுச்சேரி / புதுவை சடையாண்டி ஐயனாரப்பன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்..

புதுவை சடையாண்டி ஐயனாரப்பன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்..

Puducherry News | புதுச்சேரி அடுத்த பள்ளித்தென்னல் மதுரா சடையாண்டி குப்பம் கிராமத்தில் உள்ள பூர்ண புஷ்களாம்பாள் சமேதா ஸ்ரீசடையாண்டி ஐயனாரப்பன் ஆலய மண்டல அபிஷேகம் மற்றும் திருக்கல்யாணம் உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. 

புதுச்சேரி அடுத்த பள்ளித்தென்னல் மதுரா சடையாண்டி குப்பம் கிராமத்தில் உள்ள ஸ்ரீபூர்ண புஷ்களாம்பாள் சமேதா ஸ்ரீசடையாண்டி ஐயனாரப்பன் ஆலய மண்டல அபிஷேகம் மற்றும் திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சங்கு பூஜை, சங்காபிஷேகம், ஸ்ரீஐயனாரப்பன் அபிஷேக ஆராதனை, சடையாண்டி குப்பத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து தட்டு வரிசை எடுத்து செல்லும் நிகழ்ச்சி போன்றவை நடைபெற்றன.

மேலும், திருக்கல்யாண உற்சவத்தில், சடையாண்டி குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இறுதியில் விருந்தோம்பல் நிகழ்ச்சி மற்றும் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகர், ஸ்ரீபூர்ண புஷ்களாம்பாள் சமேதா ஸ்ரீசடையாண்டி ஐயனாரப்பன், ஸ்ரீருத்ர வன்னிய மகாராஜா, ஸ்ரீசடையாண்டி சித்தர் சுவாமிகள் ஆகியோருக்கு மின் அலங்காரம் மற்றும் பூக்களால் அலங்கரித்து வீதி உலா காட்சி நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உங்கள் நகரத்திலிருந்து (புதுச்சேரி)

8 வயதில் விபத்தில் கால் இழப்பு... நம்பிக்கையுடன் பெட்ரோல் பங்கில் வேலை... குழந்தைகள் படிப்புக்காக ஏங்கும் மாற்றுத்திறனாளி

தவளக்குப்பம் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா.. திரளான பக்தர்கள் தரிசனம்..

பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளிடம் இதை பண்ணாதீங்க..! புதுவை பேராசிரியர் சொன்ன ஷாக் தகவல்..!

கழுவேத்தி மூர்க்கன் படம் எப்படி இருக்கு? - புதுவை மக்கள் கருத்து..

புதுச்சேரியில் பாதாள சாக்கடை பணி தீவிரம்.. இந்த பகுதியில் வாகனங்கள் செல்ல தடை!

சூடுபிடிக்கும் ஐபிஎல் இறுதிப்போட்டி... பிரியாணியால் தோனி உருவம் வரைந்து அசத்திய புதுச்சேரி ஓவியர்!

3 இடங்களில் 3 வேளையும் உணவு.. புதுச்சேரியில் நடிகர் கார்த்தி பிறந்தநாள் கொண்டாட்டம்..

திருநள்ளாறு கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா..!

தரமற்ற முறையில் புதுச்சேரி - கடலூர் சாலை.. அலட்சியம் காட்டிய அதிகாரிகளால் பொதுமக்கள் அதிர்ச்சி..

தாய் கிருஸ்துவர், தந்தை இந்து... அல்ஜீரியா இஸ்லாமிய பெண்ணை வள்ளலார் முறைப்படி கரம் பிடித்த இளைஞர்..

புதுச்சேரியில் சித்தர்களை நோக்கி சிவனடியார்கள் பயணம்..

இதனைத்தொடர்ந்து பாரதமாதா நாடக சபாவின் தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மண்டல அபிஷேகம் பூர்த்தி விழாவில் கிராமவாசிகளும் பக்தர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஆலயத்தின் அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் செய்திருந்தார்.

Tags:Local News, Puducherry

முக்கிய செய்திகள்