முகப்பு » புகைப்பட செய்தி » »சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி...!
PREVNEXT
News18 Tamil | May 12, 2023, 13:55 IST

சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி...!

Theni | சுருளி அருவியில் நீர் வரத்து அதிகமாகி உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

     மேகமலை வனப்பகுதிகளில் யளவு குறைந்து நீர் வரத்து சீரானதால் 3 நாட்களுக்கு பின் சுருளி அருவியில்  சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
    1/ 5

    மேகமலை வனப்பகுதிகளில் யளவு குறைந்து நீர் வரத்து சீரானதால் 3 நாட்களுக்கு பின் சுருளி அருவியில்  சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

    2/ 5

    தேனி மாவட்டம் கம்பம் அருகே ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது சுருளி அருவி. நீர்ப்பிடிப்பு பகுதிகளான இரவங்கலாறு வென்னியாறு உள்ளிட்ட மேகமலை வனப்பகுதிகளில் பெய்த கோடை மழையால் கடந்த செவ்வாய்க்கிழமை சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    3/ 5

    இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.  தொடர்ந்து நீர்வரத்து சீராகாமல் இருந்ததால் சுற்றுலா பயணிகளுக்கான தடை நேற்று வரை 3 நாட்களாக நீடித்தது.

    4/ 5

    இந்நிலையில் தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையளவு குறைந்து அருவியின் நீர்வரத்து சீரானதால் இன்று காலை முதல் சுற்றுலா பயணிகளுக்கான தடையை கம்பம் கிழக்கு வனத்துறையினர் விலக்கிக் கொண்டனர்.

    5/ 5

    இதையடுத்து அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர். உயரமான மலையில் இருந்து ஆர்ப்பரித்து கொட்டுகிற சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து வருகின்றனர்.

    Published by: Vaijayanthi S
    First published: May 12, 2023, 13:55 IST

    அண்மைச்செய்தி

    முக்கிய செய்திகள்