ரம்ஜான் என்றாலே உணவுகளும் ஹெவியாகத்தான் இருக்கும். பார்த்ததும் வாயையும், வயிற்றையும் கட்டுப்படுத்த முடியாமல் ஹெவியாக சாப்பிட்டுவிட்டு செரிமாணமாகாமல் தவித்தால் கவலையே வேண்டாம். இந்த வீட்டுக்குறிப்புகளை செய்தால் செரிமாணமடைந்து நெஞ்சு எரிச்சல் குணமாகும். மசாலாப் பொருட்கள் : சமையலுக்குப் பயன்படுத்தப்படும் ஏலக்காய், பட்டை, கிராம்பு போன்றவை பல வகையான உடல் உபாதைகளுக்கு உதவும். நெஞ்சு எரிச்சலுக்கு ஏலக்காய், பட்டை , கிராம்பை என ஏதாவது ஒன்றை அப்படியே வாயில் மென்று விழுங்கலாம். இல்லையெனில் இவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து வெது வெதுப்பாக அருந்தலாம். சோம்பு : செரிமாணமின்மை , நெஞ்சு எரிச்சலை தவிர்க்க ஒரு ஸ்பூன் சோம்பை மென்று விழுங்கினால் குறையும். இஞ்சி : இஞ்சி பாரம்பரிய மருத்துவம். இதை தண்ணீரில் கொதிக்க வைத்து வெது வெதுப்பாக அருந்தலாம் அல்லது அப்படியே மென்று விழுங்கலாம். நெல்லிக்காய் , கற்றாழை : பெரிய நெல்லிக்காய் மென்று சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் நீங்கும். அதேபோல் கற்றாழை சதையை நீக்கி ஜூஸ் போட்டுக் குடிக்கலாம். குறிப்பு : உணவு உண்ட பின் உடனே படுப்பதை தவிர்க்கவும். படுப்பது செரிமானம் தடைபட்டு நெஞ்சு எரிச்சலை உண்டாக்கும். குறைந்தது 30 - 40 நிமிடங்களுக்கு படுக்காமல் இருப்பது நல்லது. கார்பனேட், கியாஸ் கலந்த குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்க்கவும். இது pH அளவை சீர்குலைக்கும்.