PREVNEXT
முகப்பு / செய்தி / தூத்துக்குடி / தூத்துக்குடியில் சமூகஆர்வலரை கொலை செய்ய முயற்சி.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

தூத்துக்குடியில் சமூகஆர்வலரை கொலை செய்ய முயற்சி.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

Tuticorin Crime News : விலையுயர்ந்த ஆடி காரில் வந்த ரியல் எஸ்டேட் தொடர்புடைய நபர் இவர் மீது காரை மோத முயற்சி செய்து மிரட்டி சென்றுள்ளனர்.

சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

தூத்துக்குடியில் கஞ்சாவிற்கு எதிராக போராடிய சமூக ஆர்வலரை கொலை செய்ய முயற்சி செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடியில் சார் பதிவாளர் அலுவலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது  இந்த கட்டிடத்தை தனியார் சிலரின் சுயநலத்திற்காக 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காட்டுப் பகுதியில் இடமாற்றம் செய்ய சிலர் முயற்சி நடந்தது வருகிறது. இதனால் பொதுமக்களுக்குபாதிப்பு ஏற்படும் என்று அப்பகுதி சமூக ஆர்வலர் குணசீலன் வியாபாரிகள், அரசியல் கட்சியினர் என பலரையும் ஒன்றிணைத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருவதோடு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைகளும் பொது நல வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இந்த நிலையில் நேற்று உடன்குடி ஆர்.சி.சர்ச் அருகில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த இவரை விலையுயர்ந்த ஆடி காரில் வந்த ரியல் எஸ்டேட் தொடர்புடைய நபர் இவர் மீது காரை மோத முயற்சி செய்து மிரட்டி சென்றுள்ளனர். இதையடுத்து உடன்குடி குணசீலன் குலசேகரப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

உங்கள் நகரத்திலிருந்து (தூத்துக்குடி)

பாஜகவை கண்டித்து அதிமுக போராட்டத்தில் ஈடுபட்டதால் கோவில்பட்டியில் பரபரப்பு

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோலாகலமாக நடந்த மாசி திருவிழா...

மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறு.. தொழிலாளியை கொலை செய்த நண்பன் கைது..!

அண்ணாமலை செய்த ஊழல்கள் பட்டியலை வெளியிடுவேன்... ஆர்.எஸ்.பாரதி பேச்சு..!

புத்தகத்தில் வரும் கதாபாத்திரங்களாக மாறி பாடம்.. கோவில்பட்டி ஆசிரியரின் புது முயற்சிக்கு பாராட்டு..

“அதிமுக வரலாறு அண்ணாமலைக்கு தெரியாது.. அரசியலில் பக்குவப்படவில்லை” - கடம்பூர் ராஜூ விமர்சனம்

8ம் வகுப்புத் தேர்ச்சி போதும்... ரூ.50,000 வரை சம்பளம்.. அரசு வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்

மதுபோதையில் அரசுப்பேருந்தை தாறுமாறாக இயக்கிய ஓட்டுநர்.. அலறிய பயணிகள்..!

குறைந்த செலவில் மாலத்தீவுக்கு கடல் போக்குவரத்து... தூத்துக்குடியில் துறைமுக அதிகாரி தகவல்..!

நெட் பேக் காலியானது.. கேம் விளையாட முடியாததால் 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை..!

வடிவேலு பட பாணியில் மிளகாய் பொடி தூவி நகைக்கடையில் கொள்ளை..! யூடியூப் பார்த்து திருட வந்ததாக கைதானவர்கள் வாக்குமூலம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் கஞ்சா விற்பனைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் கொடூரமாக ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்ய முயற்சி நடந்துள்ள நிலையில் மீண்டும் ஒரு சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

செய்தியாளர் : பி.முரளிகணேஷ் 

Tags:Crime News, Local News, Tamil News, Tuticorin

முக்கிய செய்திகள்