PREVNEXT
முகப்பு / செய்தி / தூத்துக்குடி / பிளாஸ்டிக் லைட்டர்கள் தடை செய்யப்படுமா..? தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வைத்த கோரிக்கை..!

பிளாஸ்டிக் லைட்டர்கள் தடை செய்யப்படுமா..? தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வைத்த கோரிக்கை..!

Matchbox manufacturers Request | தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலில் நேரடியாக 4 லட்சம் பேரும், மறைமுகமாக 2 லட்சம் பேரும் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக 90 விழுக்காடு பேர் பெண்கள் உள்ளனர்.

லைட்டர்

லைட்டர்

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகளில் 90 சதவிகிதம் தமிழகத்தில்தான் உற்பத்தியாகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி மற்றும் சுற்றுப் பகுதிகளிலும், விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சாத்தூர், சிவகாசி சுற்றுப் பகுதிகளிலும், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம் சுற்றுப் பகுதிகளிலும், வேலூர் மாவட்டம் குடியாத்தம், காவேரிபூம்பட்டினம் ஆகிய பகுதிகளிலும் தீப்பெட்டிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இங்கு உற்பத்தியாகும் தீப்பெட்டிகள் கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்கம், ஒடிசா, பீகார், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட பல வடமாநிலங்களுக்கு ஏற்றுமதிசெய்யப்படுகின்றன. மேலும், வெளி நாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. இத்தொழிலில் நேரடியாக 4 லட்சம் பேரும், மறைமுகமாக 2 லட்சம் பேரும் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக 90 விழுக்காடு பேர் பெண்கள் உள்ளனர்.

30000 கிரிஸ்டலில் வித்தியாசமான தோற்றம் - ஃபேஷன் ஷோவில் கலக்கிய ராப் பாடகி.!

உங்கள் நகரத்திலிருந்து (தூத்துக்குடி)

புத்தகத்தில் வரும் கதாபாத்திரங்களாக மாறி பாடம்.. கோவில்பட்டி ஆசிரியரின் புது முயற்சிக்கு பாராட்டு..

8ம் வகுப்புத் தேர்ச்சி போதும்... ரூ.50,000 வரை சம்பளம்.. அரசு வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்

நெட் பேக் காலியானது.. கேம் விளையாட முடியாததால் 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை..!

“அதிமுக வரலாறு அண்ணாமலைக்கு தெரியாது.. அரசியலில் பக்குவப்படவில்லை” - கடம்பூர் ராஜூ விமர்சனம்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோலாகலமாக நடந்த மாசி திருவிழா...

மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறு.. தொழிலாளியை கொலை செய்த நண்பன் கைது..!

மதுபோதையில் அரசுப்பேருந்தை தாறுமாறாக இயக்கிய ஓட்டுநர்.. அலறிய பயணிகள்..!

பாஜகவை கண்டித்து அதிமுக போராட்டத்தில் ஈடுபட்டதால் கோவில்பட்டியில் பரபரப்பு

குறைந்த செலவில் மாலத்தீவுக்கு கடல் போக்குவரத்து... தூத்துக்குடியில் துறைமுக அதிகாரி தகவல்..!

வடிவேலு பட பாணியில் மிளகாய் பொடி தூவி நகைக்கடையில் கொள்ளை..! யூடியூப் பார்த்து திருட வந்ததாக கைதானவர்கள் வாக்குமூலம்

அண்ணாமலை செய்த ஊழல்கள் பட்டியலை வெளியிடுவேன்... ஆர்.எஸ்.பாரதி பேச்சு..!

தீப்பெட்டி தொழிலை பாதுகாக்கும் வகையில், மத்திய அரசு அளித்து வரும் வெளிநாட்டு ஏற்றுமதிக்கான ஊக்கத்தொகையை அதிகரிக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல, தீப்பெட்டி தொழிலை பாதிக்கும் லைட்டருக்கு கட்டாயம் தடைவிதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.

அட்டைக்குச்சி, புளூமேச் பேப்பர், மெழுகு, குளோரேட், பாஸ்பரஸ், சல்பர் உட்பட 14 மூலப்பொருள்களைக் கொண்டு தீக்குச்சி, தீப்பெட்டி தயார் செய்யப்படுகிறது. இவைகளின் விலை எவ்வித கட்டுப்பாடும் இல்லமால் உயர்ந்து கொண்டே வரும் நிலையில் லைட்டர் பிரச்னையில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் விரும்புகின்றனர்.

செய்தியாளர்: மகேஷ்வரன், கோவில்பட்டி.

Tags:Kovilpatti, Local News, Thoothukudi

முக்கிய செய்திகள்