PREVNEXT
முகப்பு / செய்தி / தூத்துக்குடி / கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Thaipusam : கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

கழுகுமலை கழுகாசலமூர்த்தி

கழுகுமலை கழுகாசலமூர்த்தி

தமிழகத்தின் தென் பழனி என்று அழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி  திருக்கோவிலில் தைப்பூச திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலையில் குடவரை கோவிலான கழுகாசலமூர்த்தி  திருக்கோவில் உள்ளது. தமிழகத்தின் தென் பழனி என்று அழைக்கப்படும் கழுகாசலமூர்த்தி  திருக்கோவிலில் தைப்பூச திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்தாண்டுக்கான தைப்பூச திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடைதிறக்கப்பட்டு திருவனந்தல்பூஜை, விளாபூஜை, காலசாந்தி பூஜைகள் நடைபெற்றது. இதையெடுத்து கொடி மரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சியும், கொடி மரத்திற்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

உங்கள் நகரத்திலிருந்து (தூத்துக்குடி)

புத்தகத்தில் வரும் கதாபாத்திரங்களாக மாறி பாடம்.. கோவில்பட்டி ஆசிரியரின் புது முயற்சிக்கு பாராட்டு..

குறைந்த செலவில் மாலத்தீவுக்கு கடல் போக்குவரத்து... தூத்துக்குடியில் துறைமுக அதிகாரி தகவல்..!

8ம் வகுப்புத் தேர்ச்சி போதும்... ரூ.50,000 வரை சம்பளம்.. அரசு வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்

மதுபோதையில் அரசுப்பேருந்தை தாறுமாறாக இயக்கிய ஓட்டுநர்.. அலறிய பயணிகள்..!

நெட் பேக் காலியானது.. கேம் விளையாட முடியாததால் 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை..!

அண்ணாமலை செய்த ஊழல்கள் பட்டியலை வெளியிடுவேன்... ஆர்.எஸ்.பாரதி பேச்சு..!

பாஜகவை கண்டித்து அதிமுக போராட்டத்தில் ஈடுபட்டதால் கோவில்பட்டியில் பரபரப்பு

மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறு.. தொழிலாளியை கொலை செய்த நண்பன் கைது..!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோலாகலமாக நடந்த மாசி திருவிழா...

வடிவேலு பட பாணியில் மிளகாய் பொடி தூவி நகைக்கடையில் கொள்ளை..! யூடியூப் பார்த்து திருட வந்ததாக கைதானவர்கள் வாக்குமூலம்

“அதிமுக வரலாறு அண்ணாமலைக்கு தெரியாது.. அரசியலில் பக்குவப்படவில்லை” - கடம்பூர் ராஜூ விமர்சனம்

திருநெல்வேலியில் கட்டாயம் பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள்..!

இதைத்தொடர்ந்து கழுகாசலமூர்த்தி, வள்ளி,தெய்வானைக்கும், சோமாஸ் கந்தர், அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவினை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் சுவாமி,அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் அடுத்த மாதம் 5ந்தேதி நடைபெறுகிறது.

Tags:Local News, Murugan temple, Tamil News, Thai Month, Thaipusam, Tuticorin

முக்கிய செய்திகள்