PREVNEXT
முகப்பு / செய்தி / தூத்துக்குடி / தூத்துக்குடியில் 10 கிலோ போலி ஹெராயின் வைத்திருந்தவரிடம் போலீசாரிடம் தீவிர விசாரணை..

தூத்துக்குடியில் 10 கிலோ போலி ஹெராயின் வைத்திருந்தவரிடம் போலீசாரிடம் தீவிர விசாரணை..

Tuticorin Fake Heroin seized | தூத்துக்குடியில் பிடிபட்டவர் போலி ஹெராயின் போதை பொருளை ஒரு கிலோ ஒரு லட்சம் ரூபாய் என்று கூறி சிலரிடம் விற்பனை செய்ய இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட நபர்

கைது செய்யப்பட்ட நபர்

தூத்துக்குடியில்  போலி ஹெராயின் வைத்திருந்த இளைஞரை பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், டவுன் டிஎஸ்பி சத்யராஜ் மேற்பார்வையில் தனிப்படை போலீசார்  ரோந்து சென்றபோது, எஸ்எஸ்  தெரு, மார்க்கெட் அருகே சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து சோதனையிட்டனர். அப்போழுது அவரிடம் ஹெராயின் போன்ற பொருள் வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து போலீசார் அந்த இளைஞரை கைது செய்து, அவரிடம் இருந்த 10 கிலோ போலி ஹெராயினை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் தூத்துக்குடி பூபாலராயர்புரத்தை சேர்ந்த ரீகன் (42) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து தலா ஒரு கிலோ எடை கொண்ட 10 பாக்கெட்டுக்களை பறிமுதல் செய்து பரிசோதித்தில் அது பொருள் யூரியா உரம் போன்று இருந்தது.

உங்கள் நகரத்திலிருந்து (தூத்துக்குடி)

பாஜகவை கண்டித்து அதிமுக போராட்டத்தில் ஈடுபட்டதால் கோவில்பட்டியில் பரபரப்பு

மதுபோதையில் அரசுப்பேருந்தை தாறுமாறாக இயக்கிய ஓட்டுநர்.. அலறிய பயணிகள்..!

வடிவேலு பட பாணியில் மிளகாய் பொடி தூவி நகைக்கடையில் கொள்ளை..! யூடியூப் பார்த்து திருட வந்ததாக கைதானவர்கள் வாக்குமூலம்

8ம் வகுப்புத் தேர்ச்சி போதும்... ரூ.50,000 வரை சம்பளம்.. அரசு வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்

மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறு.. தொழிலாளியை கொலை செய்த நண்பன் கைது..!

புத்தகத்தில் வரும் கதாபாத்திரங்களாக மாறி பாடம்.. கோவில்பட்டி ஆசிரியரின் புது முயற்சிக்கு பாராட்டு..

“அதிமுக வரலாறு அண்ணாமலைக்கு தெரியாது.. அரசியலில் பக்குவப்படவில்லை” - கடம்பூர் ராஜூ விமர்சனம்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோலாகலமாக நடந்த மாசி திருவிழா...

அண்ணாமலை செய்த ஊழல்கள் பட்டியலை வெளியிடுவேன்... ஆர்.எஸ்.பாரதி பேச்சு..!

குறைந்த செலவில் மாலத்தீவுக்கு கடல் போக்குவரத்து... தூத்துக்குடியில் துறைமுக அதிகாரி தகவல்..!

நெட் பேக் காலியானது.. கேம் விளையாட முடியாததால் 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை..!

இதனை தொடர்ந்து அந்த பொருளை பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் ரீகன், யூரியா உரம் போன்ற பொருளை, போலீயாக ஹெராயின் போதை பொருள் என்றும், ஒரு கிலோ ஒரு லட்சம் ரூபாய் என்றும் கூறி சிலரிடம் விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிடிபட்ட ரீகனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

செய்தியாளர்: பி.முரளிகணேஷ்

 

Tags:Local News, Tuticorin

முக்கிய செய்திகள்