PREVNEXT
முகப்பு / செய்தி / தூத்துக்குடி / காதலனை கரம்பிடிக்க வீட்டைவிட்டு மகள் ஓட்டம்.. மனமுடைந்த பெற்றோர் தற்கொலை.. தூத்துக்குடியில் அதிர்ச்சி!

காதலனை கரம்பிடிக்க வீட்டைவிட்டு மகள் ஓட்டம்.. மனமுடைந்த பெற்றோர் தற்கொலை.. தூத்துக்குடியில் அதிர்ச்சி!

thoothukudi | பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதிக்காததால் மகள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

உயிரிழந்த பெற்றோர்

உயிரிழந்த பெற்றோர்

தூத்துக்குடியில் மாற்று சமூகத்தை சேர்ந்த வாலிபரை திருமணம் செய்து கொள்ள மகள் வீட்டை விட்டு சென்றதால் மனமுடைந்த பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் தெய்வசெயல்புரம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சின்னத்துரை - சங்கரம்மாள் தம்பதி. இவரது மகளுக்கும் புதுப்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் காளிமுத்து என்பவருக்கும் இடையே  பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. மகளின் காதல் விவகாரம் தெரியவந்ததையடுத்து கண்டித்துள்ளனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காதலனை கரம்பிடிப்பதற்காக அவரது பெண் நேற்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் மனமுடைந்த தாய் சங்கரம்மாள் வீட்டில் தூக்கிட்டும், தந்தை சின்னத்துரை அடைக்கலாபுரம் என்ற இடத்தில் விஷம் அருந்தியும் தற்கொலை செய்து கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் நகரத்திலிருந்து (தூத்துக்குடி)

மதுபோதையில் அரசுப்பேருந்தை தாறுமாறாக இயக்கிய ஓட்டுநர்.. அலறிய பயணிகள்..!

குறைந்த செலவில் மாலத்தீவுக்கு கடல் போக்குவரத்து... தூத்துக்குடியில் துறைமுக அதிகாரி தகவல்..!

நெட் பேக் காலியானது.. கேம் விளையாட முடியாததால் 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை..!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோலாகலமாக நடந்த மாசி திருவிழா...

மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறு.. தொழிலாளியை கொலை செய்த நண்பன் கைது..!

புத்தகத்தில் வரும் கதாபாத்திரங்களாக மாறி பாடம்.. கோவில்பட்டி ஆசிரியரின் புது முயற்சிக்கு பாராட்டு..

அண்ணாமலை செய்த ஊழல்கள் பட்டியலை வெளியிடுவேன்... ஆர்.எஸ்.பாரதி பேச்சு..!

பாஜகவை கண்டித்து அதிமுக போராட்டத்தில் ஈடுபட்டதால் கோவில்பட்டியில் பரபரப்பு

“அதிமுக வரலாறு அண்ணாமலைக்கு தெரியாது.. அரசியலில் பக்குவப்படவில்லை” - கடம்பூர் ராஜூ விமர்சனம்

8ம் வகுப்புத் தேர்ச்சி போதும்... ரூ.50,000 வரை சம்பளம்.. அரசு வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்

வடிவேலு பட பாணியில் மிளகாய் பொடி தூவி நகைக்கடையில் கொள்ளை..! யூடியூப் பார்த்து திருட வந்ததாக கைதானவர்கள் வாக்குமூலம்

செய்தியாளர்: பி.முரளிகணேஷ், தூத்துக்குடி.

Tags:Crime News, Local News, Suicide, Thoothukodi

முக்கிய செய்திகள்