PREVNEXT
முகப்பு / செய்தி / தூத்துக்குடி / கோவில்பட்டி : டாஸ்மாக் கடையில் ரூ 1.5 லட்சம் கொள்ளை.. குண்டர் சட்டத்தில் இருவர் கைது

கோவில்பட்டி : டாஸ்மாக் கடையில் ரூ 1.5 லட்சம் கொள்ளை.. குண்டர் சட்டத்தில் இருவர் கைது

Crime News | டாஸ்மாக் கொள்ளை வழக்கில் கைதான நபர்கள் மீது ஏற்கனவே வழிப்பறி, கொலை முயற்சி, திருட்டு உள்பட தூத்துக்குடி மாவட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது.

குண்டாஸில் கைது செய்யப்பட்ட இருவர்

குண்டாஸில் கைது செய்யப்பட்ட இருவர்

கோவில்பட்டி  அருகே டாஸ்மார்க் ஊழியர்களிடம் கத்தியை காட்டி பணம் பறித்த வழக்கில் இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

உங்கள் நகரத்திலிருந்து (தூத்துக்குடி)

நெட் பேக் காலியானது.. கேம் விளையாட முடியாததால் 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை..!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோலாகலமாக நடந்த மாசி திருவிழா...

மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறு.. தொழிலாளியை கொலை செய்த நண்பன் கைது..!

அண்ணாமலை செய்த ஊழல்கள் பட்டியலை வெளியிடுவேன்... ஆர்.எஸ்.பாரதி பேச்சு..!

வடிவேலு பட பாணியில் மிளகாய் பொடி தூவி நகைக்கடையில் கொள்ளை..! யூடியூப் பார்த்து திருட வந்ததாக கைதானவர்கள் வாக்குமூலம்

பாஜகவை கண்டித்து அதிமுக போராட்டத்தில் ஈடுபட்டதால் கோவில்பட்டியில் பரபரப்பு

குறைந்த செலவில் மாலத்தீவுக்கு கடல் போக்குவரத்து... தூத்துக்குடியில் துறைமுக அதிகாரி தகவல்..!

8ம் வகுப்புத் தேர்ச்சி போதும்... ரூ.50,000 வரை சம்பளம்.. அரசு வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்

“அதிமுக வரலாறு அண்ணாமலைக்கு தெரியாது.. அரசியலில் பக்குவப்படவில்லை” - கடம்பூர் ராஜூ விமர்சனம்

மதுபோதையில் அரசுப்பேருந்தை தாறுமாறாக இயக்கிய ஓட்டுநர்.. அலறிய பயணிகள்..!

புத்தகத்தில் வரும் கதாபாத்திரங்களாக மாறி பாடம்.. கோவில்பட்டி ஆசிரியரின் புது முயற்சிக்கு பாராட்டு..

தூத்துக்குடி மாவட்டம்  கோவில்பட்டி அருகே எட்டயபுரம் காவல் எல்லைக்குள் உட்பட்ட முத்துலாபுரம் கிராமத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. கடந்த 18-11-2022 அன்று இரவு 10 மணி அளவில் சூப்பர் வைசர் ஐயப்பசாமி மற்றும் ஊழியர் கருப்பசாமி ஆகிய இருவரும் பணியில் இருந்துள்ளனர். வேலையை முடித்து புறப்பட தயாரானபோது திடீரென முகமுடி அணிந்து கையில் பட்டாக்கத்தியுடன் வந்த இருவர், டாஸ்மார்க் கடைக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி  ரூ.1,50,470 பணத்தை பறித்து சென்றனர்.

இதுகுறித்து டாஸ்மார்க் சூப்பர் வைசர் ஐயப்பசாமி எட்டையபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  புகாரின் பேரில், எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.  டாஸ்மார்க் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீஸார் இதனை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தினர்.

Also Read:  இன்ஸ்டா பெண்கள்தான் குறி.. போட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டல்.. தென்காசி வாலிபர் கைது

இதில் சிலுவைப்பட்டி துரைசிங் நகரைச் சேர்ந்த சங்கிலி கருப்பன் என்பவரின் மகன்  விக்ரம் என்ற விக்கி (22) மற்றும் அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து  மகன் ஆனந்த் என்ற அசோக் (29) ஆகிய இருவரையும்  எட்டையபுரம் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைதான அசோக் என்பவனுக்கு வழிப்பறி, கொலை முயற்சி, திருட்டு உற்பட தூத்துக்குடி மாவட்ட காவல் நிலையங்களில் 29 வழக்குகளும் விக்ரம் என்ற விக்கிக்கு 5 வழக்குகளும் ஏற்கனவே நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டம் கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்.பி.பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். இதையடுத்து இருவரையும் குண்டர் தடுப்பு காவலில் வைக்க மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் பாளையங்கோட்டை சிறையில் இருக்கும் விக்கி, அசோக் இருவரும் குண்டர் தடுப்பு காவலுக்கு மாற்றப்பட்டனர்.

Tags:Crime News, Local News, Tuticorin

முக்கிய செய்திகள்