தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவில் பிறந்த குழந்தைகளை பார்க்க மருத்துவமனை ஊழியர்கள் பணம் கேட்டதால் பொது மக்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மகப்பேறு பிரிவுக்கு என்று அமைக்கப்பட்ட புதிய கட்டிடத்தினை சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைத்தார். அந்த புதிய கட்டிடத்தில் மகப்பேறு பிரிவு தற்பொழுது செயல்பட்டு வருகிறது. கோவில்பட்டி மட்டுமின்றி, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தென்காசி என 4 மாவட்டங்களை சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் மகப்பேறு சிகிச்சைக்கு இங்கு வருகின்றனர்.
இந்நிலையில் புதிய கட்டிடப்பிரிவில் பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டுக்கள் ஒரு புறம் இருக்க மறுபுறம், உள்ளே சிகிச்சை பெறுபவர்களை காண அனுமதிப்பதில்லை என்று பொது மக்கள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக உள்ளே சிகிச்சை பெறுபவர்களுடன் ஒருவர் தங்க அனுமதிப்பது வழக்கம். அதேபோன்று சிகிச்சை பெறுபவர்களை பார்க்க என்று தனி நேரம் ஒதுக்கீடு செய்வது அனுமதிப்பது உண்டு. ஆனால் இங்கு அவ்வாறு நேரம் ஒதுக்கீடு செய்யாமல் சிகிச்சை பெறுபவர்களை பார்க்க அனுமதிக்க விடுவதில்லை என்று பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கோவில்பட்டி : டாஸ்மாக் கடையில் ரூ 1.5 லட்சம் கொள்ளை.. குண்டர் சட்டத்தில் இருவர் கைது
தூத்துக்குடியில் 10 கிலோ போலி ஹெராயின் வைத்திருந்தவரிடம் போலீசாரிடம் தீவிர விசாரணை..
காதலனை கரம்பிடிக்க வீட்டைவிட்டு மகள் ஓட்டம்.. மனமுடைந்த பெற்றோர் தற்கொலை.. தூத்துக்குடியில் அதிர்ச்சி!
பிரபல உணவகத்தில் புகுந்து ஷவர்மாவை ருசிபார்த்த தெரு நாய்... தூத்துக்குடியில் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..
தூத்துக்குடியில் சமூகஆர்வலரை கொலை செய்ய முயற்சி.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
பிளாஸ்டிக் லைட்டர்கள் தடை செய்யப்படுமா..? தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வைத்த கோரிக்கை..!
காங்கிரஸூம் கமலும்.. ஜீரோ ப்ளஸ் ஜீரோ ஃபார்முலாதான் - எச்.ராஜா கருத்து
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
நெல்லையில் கொள்ளையடித்து திரும்பும்போது விபத்து.. போலீசில் வசமாக சிக்கிய கொள்ளை கும்பல்
தமிழுக்கு முதல் எதிரி திராவிடம் தான் - எச்.ராஜா விமர்சனம்
மழை வேண்டி மரங்களுக்கு திருமணம்.. வடை, பாயாசத்துடன் விருந்து வைத்த கிராமம்..!
கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பிறந்ததும், குழந்தையின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் பார்க்க ஆர்வமாக வந்தால் உள்ளே அனுமதிக்க மறுப்பதால் பல மணி நேரம் வெளியில் காத்து கிடக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு பணம் கொடுத்தால் மட்டும் உள்ளே சென்று பார்க்க அனுமதிப்பதாகவும், இல்லை பிறந்த குழந்தையை வெளியே வந்து காண்பிக்க அனுமதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து மருத்துவமனை ஊழியர்களின் கேட்டால் தரக்குறைவாக வார்த்தைகளால் திட்டி வெளியே அனுப்பிவிடும் சூழ்நிலையும் உள்ளது.
இதைபோன்று இன்றும் வழக்கம் போல உள்ளே அனுமதிக்கவில்லை என்பதால் உள்ளே சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையெடுத்து மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன் விரைந்து வந்து மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். சிகிச்சை பெறுபவர்களை பார்க்க நேரம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், பணம் வசூலித்தது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்ததால் மக்கள் கலைந்து சென்றனர். இதனால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Govt hospital, Govt hospitals, Kovilpatti