தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வெம்பூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருபவர் துரைப்பாண்டி. கயத்தார் அருகே உள்ள கம்மாப்பட்டி சொந்த ஊர் என்றாலும், தற்போது கோவில்பட்டியில் இருந்து தினமும் பள்ளிக்கு சென்று வருகிறார். கடந்த 4 ஆண்டுகளாக துரைப்பாண்டி வெம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
சிறுவயதில் இருந்தே சுதந்திர போராட்ட வீரர்கள், வரலாற்று மன்னர்கள் கதைகளை கேட்பதிலும், நாடகங்களை பார்ப்பதிலும் ஆர்வம் கொண்ட துரைப்பாண்டி, அந்த கதையில் வரும் கதை நாயகர்களாக தன்னை ஒப்பனை செய்து நடித்து பார்ப்பதும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளிலும், கலந்துகொண்டு பரிசுகளையும் வென்றுள்ளார். சிறுவயதில் அவரிடம் இருந்த ஆர்வம், துடிப்பு ஆகியவை தான் ஆசிரியராக பொறுப்பு ஏற்றதும், அதனை மாணவ-மாணவிகளின் கற்றலை ஊக்குவிக்கவும், அவர்கள் புரிந்து ஆர்வமுடன் படிப்பதற்கும் பயன்படுத்தி கொண்டார்.
கண்மாய் நீரில் மூழ்கி 3பள்ளி மாணவர்கள் மரணம்.. விளாத்திகுளத்தில் நிகழ்ந்த சோகம்...
“கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு எதுக்கு ரூ.10 லட்சம்” - சீமான் கேள்வி
தாலியை அடகுவைக்கும் தாய்மார்களுக்கு அரசு என்ன செய்யும்... சீமான் ஆவேசம்
ஸ்டெர்லைட் கலவரம்: ‘துப்பாக்கி சூடு நடத்திய காவலர்கள் எங்கள் கண் முன்னே நடமாடுகிறார்கள்’
நடுக்கடலில் மிதந்த மர்ம படகு.. போதைப்பொருள் கடத்தலா? - 6 பேரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அதிகாரிகள்
கட்டபொம்மனின் குலதெய்வமான வீரசக்க தேவி கோவில் திருவிழா.. தடைகளுக்கு பின் பாஞ்சாலங்குறிச்சி நோக்கி ஜோதி ஓட்டம்..
ட்விட்டரில் வன்முறையை தூண்டும் வகையில் பதிவு... பாஜக நிர்வாகி 'கட்டெறும்பு' இசக்கி கைது
போலி நிறுவனங்கள் முகவர்கள் கூறுவதை நம்பி ஏமாற வேண்டாம் - தூத்துக்குடி துறைமுகம் எச்சரிக்கை
சாவர்க்கர் பிறந்த நாளில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு- கடலில் கருப்பு கொடி காட்டி விசிக போராட்டம்
ரூ.30 கோடி மதிப்புள்ள 18 கிலோ திமிங்கலம் எச்சம் பதுக்கல்.. அதிமுக முன்னாள் கவுன்சிலர் உள்ளிட்ட 4 பேர் கைது
மாற்றி கொடுக்கப்பட்ட மாத்திரை... பச்சிளம் குழந்தைக்கு உடல் நடுக்கம்.. கோவில்பட்டியில் பரபரப்பு!
தமிழ் பாடத்தில் வரக்கூடிய பாடல்கள், வரலாற்று மற்றும் சுதந்திர போராட்ட நாயகர்கள் வேடமணிந்து துரைப்பாண்டி பாடங்களை மாணவர்களுக்கு கற்று தந்து கொண்டு இருக்கிறார். திருவள்ளுவர், வீரபாண்டிய கட்டபொம்மன், மகாகவி பாரதியார், வ.உ.சி, ராஜராஜசோழன் என தான் சொல்லிக்கொடுக்கும் வகுப்பில் பாடத்தில் வரக்கூடிய முக்கிய தலைவர்களின் வேடங்களை அணிந்தவாறு பாடம் எடுத்து அசத்தி வருகிறார்.
இதையும் படிங்க : 8ம் வகுப்பு தேர்ச்சியா? தஞ்சாவூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணி
2014ம் ஆண்டு தனது ஆசிரியர் பணியை தொடங்கிய துரைப்பாண்டி வேலூர் அணைக்கட்டு, புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள பள்ளிகளில் பணியாற்றி 4 வது பள்ளியாக வெம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளாக ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு வேடமணிந்து சென்று மாணவ-மாணவிகள் மத்தியில் பாடங்களை சொல்லி கொடுத்து அவர்களுக்கு பாடம் எளிதில் சொல்லிக்கொடுத்து வருகிறார்.
கம்பீரத்துடன் பாடம் :
வேடமணிய தேவையான பொருள்களுக்காக தனது ஊதியத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி வாங்கி வருகிறார். தொடக்கத்தில் வேடமணியும்போது கொஞ்சம் சிரமப்பட்டு வந்தாலும், துரைப்பாண்டியன் முயற்சிக்கு அப்பள்ளி மற்ற ஆசிரியர்கள், மாணவர்கள் உதவி புரிய தொடங்கியுள்ளனர். அவர் வேடம் போடுவதற்கு துணை புரிந்து வருகின்றனர். வேடம் அணிந்தது மட்டுமல்ல, அந்த வேடத்திற்குரிய கம்பீரத்துடன் வகுப்பில் பாடம் நடத்துவதால் மாணவர்களுக்கு பாடங்கள் எளிதில் புரிந்து கொள்ளுகின்றனர். மேலும் தேர்வுகளில் அசத்தி வருகின்றனர்.
மாணவர்களுக்கு எளிய முறை :
இதுகுறித்து துரைப்பாண்டி பேசுகையில், “மாணவர்கள் புரிந்து கொண்டு படிக்காமல் மனப்பாடம் செய்து படிக்கும் நிலை இருப்பதை புரிந்து கொண்டேன். மேலும் காட்சி பொருளாக இருந்தால் அதனை புரிந்து கொள்கின்றனர் என்பதால் எனது வகுப்புறையில் மாற்றம் கொண்டு வர வேடமணிந்து பாடத்தினை கற்பிக்கும் முறையை கொண்டு வந்தேன். இதனால் மாணவர்கள் இடையே மனப்பாடம் செய்வது குறைந்து பாடங்களை புரிந்து கொள்ள தொடங்கினர். கொரோனாவிற்கு பின்னர் மாணவர்கள் - ஆசிரியர்கள் இடையே இடைவெளி அதிகமாக இருந்த காரணத்தினால் தினந்தோறும் மாணவர்களின் சீருடை அணிந்து பள்ளிக்கு வருவதாகவும், தன்னுடைய முயற்சிக்கு தங்கள் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் நல்ல ஒத்துழைப்பு தருகிறது” என மகிழ்ச்சியுடன் கூறினார்.
ஈஸியா புரியுது :
இதுகுறித்து அப்பள்ளி மாணவி சுசீலாதேவி கூறுகையில், “ஆசிரியர்கள் போர்டில் எழுதி போர்டுவார்கள். அது எதுவும் புரியாது. கஷ்டமாக இருக்கும். வீட்டில் போய் படித்து பார்த்தாலம் புரியாது. ஆனால் தமிழ் ஆசிரியர் துரைப்பாண்டி வேடமணிந்து பாடல், கவிதை மற்றும் பாடம் சொல்லிக்கொடுக்கிறார். இந்த முறை தங்களுக்கு எளிதாக இருப்பதாகவும், நன்கு புரிகிறது. ஒரு முறை பாடத்தினை வாசித்தல் போது, தேர்வில் நன்கு புரிந்து எழுதி மதிப்பெண்கள் பெற்று வருகிறேன்” என உற்சாகத்துடன் கூறினார்.
ஆசிரியர் என்ற முகமூடியை நீக்கி விட்டு மாணவர்களுடன் மாணவராக இருந்து, பாடங்களை நடத்துவது மட்டுமின்றி, பாடத்தில் வரும் கதாபாத்திரங்களாக வேடமணிந்து உருவகப்படுத்தி காட்சியாக மாணவர்களின் கல்வி மற்றும் கற்பனை திறனை ஊக்குவித்து வரும் ஆசிரியர் துரைப்பாண்டியன் பணி பாராட்டுக்குரியது.
செய்தியாளர் : மகேஷ்வரன் - தூத்துக்குடி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Local News, Thoothukudi