ஆரணி அருகே பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஆணை வழங்க பயனாளிகளிடம் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் செயலாளர் பணம் பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், அத்திமலைப்பட்டு கிராமத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2019-2020ம் ஆண்டு 22 பயனாளிகளுக்கு வழங்குவதற்காக 2,70,000 ரூபாய் நிதி ஒதுக்கபட்டன. 2 ஆண்டுகளை கடந்தும் இந்த தொகை பலருக்கு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விசாரித்த போது, அத்திமலைபட்டு ஊராட்சி நிர்வாகம் பணியை ரத்து செய்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Also read... ஹோட்டல் உரிமையாளர் மீது முன்னாள் ஊழியர்கள் சரமாரி தாக்குதல் - வெளியான அதிர்ச்சி வீடியோ..!
முதற்கட்டமாக ஒரு பயனாளியிடம் 6,000 ரூபாய் கையூட்டும் பெற்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
செய்தியாளர் : மோகன்ராஜ் (ஆரணி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Arani, Bribe, Crime News, Tamil Nadu, Tamil News, Thiruvannamalai, Viral Video