PREVNEXT
முகப்பு / செய்தி / தமிழ்நாடு / கருமாரியம்மன் கோவிலில் தேர் இழுத்த அமைச்சர் நாசர்...

கருமாரியம்மன் கோவிலில் தேர் இழுத்த அமைச்சர் நாசர்...

சென்னை அடுத்த பிரபல  திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் தேரோட்டம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.

தேர் இழுத்த அமைச்சர் நாசர்

தேர் இழுத்த அமைச்சர் நாசர்

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.

சென்னையை அடுத்த திருவேற்காட்டில் உள்ள தேவி கருமாரி அம்மன் கோயில் பிரசித்தி பெற்றது.  தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள்  நாள்தோறும் ஆயிரக்கணக்கில் இங்கு வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டுச் செல்கின்றனர். இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 9வது வாரத்தை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெறும்.  அதன்படி, இந்த ஆண்டு ஆடி மாத 9வது வார தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் மற்றும் 1008 சங்காபிசேகம் செய்யப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள, பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தலைமையில் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். இதில் கரகாட்டம் ஒயிலாட்டம் மயிலாட்டம் என விமர்சையாக நடைபெற்றது. சாமி வேடம் அணிந்த சாமிகள் கையில் வேலுடன் நடனம் ஆடினர்.

இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.திருத்தேரானதுசன்னதி தெரு, தேரோடும் வீதி என கோயிலின் முக்கிய நான்கு மாடவீதிகளின் வழியாக தேர் இழுத்து செல்லப்பட்டு  நிறைவாக கோயில் அருகே கொண்டு வந்து நிலை நிறுத்தப்பட்டது.

இதில் சென்னையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் இணை கமிஷனர்  செய்திருந்தார்.  மேலும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க திருவேற்காடு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.பின்னர் கோவிலில் புதிதாக வைக்கப்பட்ட எல்இடி ஸ்கீரினை அமைச்சர்  திறந்து வைத்தார்.

top videos
  • வெயிலில் பணிபுரியும் காவலர்களுக்கு மோர் வழங்கிய மாற்றுத்திறனாளி..! புதுவையில் நெகிழ்ச்சி..!
  • குறைந்த விலையில் புத்தக பைகள் வாங்க செம்ம ஸ்பாட்..! கோவையில் இங்க போங்க..!
  • இனிமையான குரலில் பாட்டுப்பாடி அசத்தும் மாற்றுத்திறனாளி..! விருதுநகர் சாலையோரத்தில் ஒலிக்கும் இசை..!
  • “கம்போடியா வரை காஞ்சி” - ஆசிய பண்பாட்டு ஆராய்ச்சி மையம் நடத்தும் புகைப்படக் கண்காட்சி!
  • இனி பேருந்து, லாரி இயற்கை எரிவாயு மூலம் இயங்கும்..! காஞ்சியில் புதிய தொழில் நுட்பம் அறிமுகம்..!
  • செய்தியாளர் : சோமசுந்தரம்

    377

    Tags:Chennai, Tamil Nadu

    முக்கிய செய்திகள்