PREVNEXT
முகப்பு / செய்தி / தமிழ்நாடு / ’நீங்கள் தமிழிலேயே பேசுங்கள்..’ - சென்னையில் நடந்த அரசு விழா மேடையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுரை!

’நீங்கள் தமிழிலேயே பேசுங்கள்..’ - சென்னையில் நடந்த அரசு விழா மேடையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுரை!

சென்னையில் நடைபெற்ற மத்திய அரசு நிகழ்வில் பயணாளர்களை தமிழில் பேச சொல்லி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுரை கூறினார்.

நிகழ்வில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

நிகழ்வில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் 'ரோஸ்கார் மேளா' எனப்படும் மாபெரும் வேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், 75,000 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணி நியமனம் வழங்கும் நோக்கில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நேற்றைய நிகழ்வில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50 மத்திய அமைச்சர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர். சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்வில் 255 பேருக்கு மத்திய அரசு பணிகளுக்கான நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 25 பேருக்கு மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் நேரடியாக வழங்கினார். மற்ற 230 பேருக்கு அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளால் வழங்கப்பட்டன.255 பேரில் தெற்கு ரயில்வே துறை பணிக்கு 85 பேரும், கடலோரக் காவல்படைக்கு 52 பேரும், பணியாளர் மாநில காப்பீடு நிறுவனத்தில் 25 பேரும்,சுங்கத்துறையில் 18 பேரும், இந்தியன் வங்கியில் 17 பேரும், வருமான வரித்துறையில் 15 பேரும், மத்திய ரிசர்வ் காவல் படையில் 10 பேரும், ஏனைய மத்திய அரசு துறைகளில் தலா ஒருவரும் பணி வாய்ப்பை பெற்றுள்ளனர். நியமன ஆணை பெற்ற 255 பேரில் 85 சதவீதத்தினர் தமிழர்கள்.

நியமன ஆணையை பெற்ற பின்னர் பயனாளர்கள் சிலர் மேடையில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். அப்படி, வருமான வரித்துறையில் ஆய்வாளர் பணி கிடைத்த நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஷகில் பேசும்போது, ஆங்கிலத்தில் தன்னை அறிமுகப்படுத்தினார். அப்போது அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவரிடம் நீங்கள் எந்த ஊரை சேர்ந்தவர் எனக் கேட்டார். அதற்கு தான் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என முகமது ஷகில் பதிலளித்தார். உடனே அமைச்சர் நிர்மலா, நீங்கள் தமிழிலேயே பேசுங்கள் என்றார்.

இதையும் படிங்க: ஆளுநர் ரவிக்கு எதிரான சிறு பொறிகள் பெருந்தீயாக மாறாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை- திமுகவின் முரசொலி எச்சரிக்கை

377

top videos
  • வெயிலில் பணிபுரியும் காவலர்களுக்கு மோர் வழங்கிய மாற்றுத்திறனாளி..! புதுவையில் நெகிழ்ச்சி..!
  • குறைந்த விலையில் புத்தக பைகள் வாங்க செம்ம ஸ்பாட்..! கோவையில் இங்க போங்க..!
  • இனிமையான குரலில் பாட்டுப்பாடி அசத்தும் மாற்றுத்திறனாளி..! விருதுநகர் சாலையோரத்தில் ஒலிக்கும் இசை..!
  • “கம்போடியா வரை காஞ்சி” - ஆசிய பண்பாட்டு ஆராய்ச்சி மையம் நடத்தும் புகைப்படக் கண்காட்சி!
  • இனி பேருந்து, லாரி இயற்கை எரிவாயு மூலம் இயங்கும்..! காஞ்சியில் புதிய தொழில் நுட்பம் அறிமுகம்..!
  • இதேபோல், கடலோர காவல்படையில் பணி ஆணை பெற்ற சென்னையை சேர்ந்த ஐஸ்வர்யா முதலில் ஆங்கிலத்தில் பேசத்தொடங்கி, பின்னர் தமிழில் நான் பேசலாமா என அமைச்சரிடம் கேட்டார். அதற்கு 'சந்தோஷமாக நன்றாக தமிழில் பேசுங்கள்' என அமைச்சர் நிர்மலா தெரிவித்தார். இந்தி மொழி திணிப்பு, மும்மொழி கொள்கை தொடர்பான விவகாரங்களில் மத்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே பூசல் நிலவி வரும் இந்த சூழலில், மத்திய அமைச்சர் தமிழிலில் பேச சொன்னது கவனம் பெற்றுள்ளது.

    Tags:Government jobs, Jobs, Nirmala Sitharaman, Tamil

    முக்கிய செய்திகள்