கட்சிக்கு விசுவாசமாக இருந்தாலும் அவ்வளவு எளிதில் பதவி கிடைக்காது என்றும் அதனை ஜீரணித்துக் கொண்டுதான் கட்சியில் இருக்க வேண்டும் என்றும் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார்.
சென்னை ஆர்.ஏ.புரம் தனியார் விடுதியில் மறைந்த முன்னாள் எம்.பி ஜின்னாவின் படத் திறப்பு விழாவில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார். பின்னர் விழாவில் பேசிய ஆர்.எஸ்.பாரதி கட்சிக்கு விசுவமாக இருந்தால் அவ்வளவு எளிதில் பதவி கிடைக்காது என்றும் ஒரே கட்சி ஒரே கொடி என்று இருந்த எனக்கு 63 வயதில் தான் எம்பி பதவியே கிடைத்தது. இதையெல்லாம் ஜீரணித்துக்கொண்டுதான் கட்சியில் இருக்க வேண்டும் என பேசினார்.
கட்சியில் துரோகம் செய்துவிட்டு முதுகில் குத்திவிட்டு சென்றவர்கள் பின்னால் வந்து கொஞ்சுவார்கள். அதனால் நான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளேன். நாங்கள் கொண்டு வந்து கட்சியில் சேர்த்தவர்கள் எல்லாரும் எம்பி, அமைச்சர் என ஆகிவிட்டனர். நாங்கள் இன்னமும் அப்படியேதான் இருக்கிறோம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:DMK, DMK executive RS Bharadhi, RS Bharathi