பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார்கள் அளிக்கலாம் என்றும், அவர்களது பெயர், விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும், புகாரை தன்னுடைய 94447 72222 என்ற செல்போன் எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு துணை கமிஷனர் ஜெயலட்சுமி கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவரது செல்போன் எண்ணிற்கு தினமும் ஏராளமான அழைப்புகள் வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக, மேலும் மூன்று தனியார் பள்ளிகளுக்கு, தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், பத்மா சேஷாத்திரி பால பவன் பள்ளி விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகள் காரணமாக,வேறு சில பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவிகளும் மின்னஞ்சலில் புகாரளித்துள்ளனர்.
மேலும் படிக்க... Today Headlines News in Tamil: இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (மே 29)
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags:Sexual harasment, Sexual Harassment Allegations