மதுரை மாவட்டம் சூர்யா நகரில் உள்ள சுபாஷினி நகர் வடக்கு இரண்டாவது தெரிவில் சில கோவில் மாடுகள் சாலைகளில் சுற்றி வந்துள்ளன. இவை குடியிருப்போருக்கு தொந்தரவாக இருந்ததாக கூறி சில கொடூர மனம் படைத்தவர்கள், அந்த மாடுகள் மீது ஆசிட்டை ஊற்றி உள்ளனர்.
ஆசிட்டால் மாட்டின் முதுகு தோல் வெந்து அழுகிய நிலையில் உள்ளதை கவனித்து அக்கம் பக்கத்தினர், மாட்டின் நிலை குறித்து வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர்.
மேலும், உடனடியாக கால்நடைத்துறை மற்றும் புளூ கிராஸ் அமைப்பிடம் நேற்று மாலை புகார் அளித்துள்ளனர்.
பசியிலும், ஆசிட் ரணத்திலும் தவித்துக் கொண்டிருக்கும் மாடுகளை உடனே மீட்டு உரிய சிகிச்சை அளித்து காப்பாற்ற கால்நடைத்துறை முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Madurai