திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
நாட்டின் முக்கிய நகரங்களிலும் வெளிநாடுகளிலும் திருப்பதிக்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து காணிக்கை செலுத்தி வருகின்றனர்.
கொரோனா காலத்தில் ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்த முடியாத பணத்தை எல்லாம் தற்போது உண்டியல் செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். 2022-23 நிதி ஆண்டில் ஏழுமலையானின் உண்டியல் காணிக்கை வருமானம் 1,100 கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால் கடந்த 10 மாதத்தில் மட்டுமே 1192 கோடியே 81 லட்ச ரூபாய் காணிக்கை வருமானம் ஏழுமலையானுக்கு கிடைத்துள்ளது.
இந்த ஆண்டு துவங்கியது முதல்
பிப்ரவரி மாதம் 79 கோடியே 34 லட்ச ரூபாயும்
மார்ச் மாதம் 128 கோடியே 60 லட்சம் ரூபாயும்
ஏப்ரல் மாதம் 126 கோடியே 65 லட்ச ரூபாயும்
மே மாதம் 130 கோடியே 29 லட்ச ரூபாயும்
ஜூன் மாதம் 123 கோடியே 76 லட்ச ரூபாயும்
ஜூலை மாதம் 139 கோடியே 75 லட்ச ரூபாயும்
ஆகஸ்ட் மாதம் 140 கோடியே 34 லட்ச ரூபாயும்
செப்டம்பர் மாதம் 122 கோடியே 19 லட்ச ரூபாயும்
அக்டோபர் மாதம் 122 கோடியே 80 லட்சம் ரூபாயும், ஆக மொத்தம் கடந்த 10 மாதங்களில் 1193 கோடியை 11 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக ஏழுமலையானுக்கு சமர்ப்பித்துள்ளனர்.
Also see...திருப்பதி தரிசன நேரத்தில் மாற்றம்... டிசம்பர் முதல் அமலாகும் புதிய விதி!
நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை மேலும் சுமார் 500 கோடி ரூபாய்க்கும் அதிக தொகை ஏழுமலையானுக்கு காணிக்கையாக கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே நடப்பு நிதி ஆண்டில் ஏழுமலையான் கோவில் உண்டியல் காணிக்கை வசூல் சாதனை படைக்க இருப்பது உறுதி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Tirumala Tirupati