இன்று மாதாந்திர கூட்டமானது மாவட்டத்தின் அனைத்து நகராட்சிகளிலும் நடைபெற்றது. இதில் பேரறிவாளனை விடுதலை செய்ய உதவிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து பரமக்குடி நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் சொத்து வரி உயர்வு குறித்து சிறப்பு நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் சேதுகருணாநிதி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நகர்மன்ற துணைத்தலைவர் குணா, ஆணையாளர், மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் வசித்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது.
Ramanathapuram | பாம்பனில் சூறைக்காற்று வீசியதில் விசைப்படகு சேதம்; மணலில் புதைந்த நாட்டு படகுகள்
Ramanathapuram : தொடங்கியது டியூப் கணவாய் மீன்கள் சீசன்.. பாம்பனில் இருந்து அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி..
நட்புக்காக...!! நண்பன் பிரிவை தாங்கமுடியாத மனவேதனையில் விபரீத முடிவு எடுத்த இளைஞர்.
Ramanathapuram : திருக்கை மீனில் இத்தனை மருத்துவ குணங்களா?
Ramanathapuram : அதிசய வில்லூண்டி தீர்த்தம்.. கடல் நீருக்கு நடுவே உள்ள நன்னீர் ஊற்று குறித்த வரலாறும், சிறப்புகளும்..
Ramanathapuram | உள்ளூரில் ரூ.150: வெளிநாடுகளுக்கு ரூ.400- மருத்துவ குணம் கொண்ட காரல் மீன்களின் சிறப்புகள்
Ramanathapuram | 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த தேவிபட்டினம் நவபாஷண நவகிரக திருக்கோவில் வரலாறு
Ramanathapuram : ஒப்பந்ததாரருக்கு பணம் கொடுக்காததால் பாதி கட்டப்பட்டிருக்கும் பள்ளி கட்டிடம்..
Ramanathapuram : பிளாஸ்டிக் கழிவுகளாக காட்சி அளிக்கும் தனுஷ்கோடி.. பொறுப்பில்லாத சுற்றுலா பயணிகளால் ஏற்பட்ட அவலம்.. வனத்துறையினர் அலட்சியம்...
சுற்றுலா விசாவில் வந்து பாதிக்கப்படும் தமிழக தொழிலாளர்கள் - மலேசிய அமைச்சர் கோரிக்கை
Ramanathapuram | 200 ஆண்டுகள் பழமையான மீனவர்களின் இஷ்ட தெய்வம் ஸ்ரீ சுமைதாங்கி முத்து தர்ம முனீஸ்வரர்.!
இதனையடுத்து தமிழக அரசின் சீரிய முயற்சியால் உச்சநீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்தது. தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து பரமக்குடி நகர்மன்ற கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை அனைத்து கவுன்சிலர்களும் வரவேற்றனர். தொடர்ந்து சொத்து வரி உயர்வு தொடர்பான தீர்மானம் மற்றும் விவாதங்கள் நடைபெற்றது.
மேலும் சொத்துவரி உயர்த்தியதை கண்டித்து 8 வார்டு உறுப்பினர் மற்றும் அ.தி.மு.கவினர்., வெளிநடப்பு செய்தனர். இறுதியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நகர் மன்ற குழு கூட்டம் முடிவுற்றது.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags:Paramakudi Constituency, Ramanathapuram