கன்னியாகுமரி மாவட்டம் குமரா கோயில் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை ஒட்டி இன்று தேர் திருவிழா நடைபெற்றது. இதில் தேர் வடம் பிடித்து இழுக்க அமைச்சர் மனோ தங்கராஜ்க்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள வேளிமலையில் அமைந்துள்ளது தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குமாரகோயில் முருகன் கோயில்.
மீன்பிடி துறைமுக புனரமைப்பு பணிகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும்... தேங்காய் பட்டணம் மீனவர்கள் கோரிக்கை...
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு நூதன முறையில் கடத்த முயன்ற 8000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
சிங்கப்பூர் கணவருடன் வீடியோ காலில் பேசியபோது சண்டை - இளம்பெண் தற்கொலை
காதல் உண்மையென்றால் மார்பில் பச்சைக்குத்து.. காதலன் டார்ச்சர் - காதலி செயலால் பரபரப்பு
கன்னியாகுமரியில் காணாமல் போன 211செல்போன்கள்.. மேற்கு வங்கம் வரை சென்று மீட்ட சைபர் க்ரைம் போலீஸார்!
தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழப்பு..
முடிவுக்கு வரும் மீன்பிடி தடைக்காலம்.. கடலுக்கு செல்ல ரெடியாகும் குமரி விசைப்படகு மீனவர்கள்..
தொடர் டார்ச்சரால் பெண் தற்கொலை: காதலன் கைது.. முன்னாள் காதலனுக்கு போலீஸ் வலை
கன்னியாகுமரியில் கனமழைக்கு வாய்ப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை.. தயார் நிலையில் தேசிய பேரிடம் மீட்பு குழு
தக்கலையில் தடை செய்யப்பட்ட நச்சு புகையிலை விற்பனை... 2 பெண்களுக்கு சிறை தண்டனை...
வேரோடு சாய்ந்து விழுந்த மரம்.. நூலிழையில் தப்பிய பயணிகள்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்...
இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக திருவிழா தேரோட்டத்துடன் நடைபெறுவது வழக்கம்
இந்த வருட வைகாசி விசாக திருவிழா தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இன்று தேரோட்ட திருவிழா நடைபெற்றது.
தேர் திருவிழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் தேரை வடம் பிடித்து இழுத்து தேர் திருவிழாவை தொடங்கி வைக்க இருந்த நிலையில் அதற்கு மாற்று மத சிந்தனையுடைய அமைச்சர் மனோ தங்கராஜ் தேரை வடம் பிடித்து இழுக்கக் கூடாது என கூறி பாஜவினர் மற்றும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மாவட்ட எஸ்பி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் தேரை வடம் பிடித்து இழுத்து தேர் திருவிழாவை தொடங்கி வைத்தனர். இதற்கு எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி மற்றும் அர்ஜூன் சம்பத் தலைமையில் பாஜகவினர் எதிர் கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர். இதில் பக்தர்கள் போலீசாரிடையே கடும் வாக்குவாதம் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
பாஜக வினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் பாஜக எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி உட்பட 100-க்கும் மேற்பட்டோரை பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:BJP, Kanniyakumari, Police arrested