PREVNEXT
முகப்பு / செய்தி / கோயம்புத்தூர் / கோவை கார் வெடிப்பு வழக்கில் புதிய தகவல்கள்..

கோவை கார் வெடிப்பு வழக்கில் புதிய தகவல்கள்..

Coimbatore | கோவையில் கார் வெடிப்பு தாக்குதலுக்கு முன்பாக முபீன் உடலில் உள்ள முடிகளை சேவ் செய்து இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை கார் வெடிப்பு சம்பவம்

கோவை கார் வெடிப்பு சம்பவம்

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு நடந்த கார் வெடிப்பு தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்  விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கார் வெடிப்பு  ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கோவை மாநகர போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் , போலீசாரும் இந்த வழக்கை பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் முபீன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சந்தேகத்திற்குரிய ஆவணங்களில் தடை செய்யப்பட்ட அமைப்பான ஐ.எஸ் அமைப்பிற்கு ஆதரவாக சில குறிப்புகள் கைப்பற்றபட்டு இருந்தது. மேலும் ஜிகாத் குறித்தும் ஹதீஸ் குறித்தும் எழுதப்பட்ட குறிப்புகளும் , ஜிகாத் யாருக்கு கடமை என்பது குறித்தும் அந்த குறிப்புகளில் எழுதப்பட்டிருந்தது.

மேலும் சிலேட்டில் ஐ. எஸ் அமைப்பிற்கான வாசகங்கள் அரபுமொழியில்  எழுதப்பட்டிருந்ததும் தெரியவந்தது. கோவை மாநகர போலீசார் கைப்பற்றிய இந்த ஆவணங்களின் ஒரு சில பகுதிகளை நேற்று நியூஸ் 18 தமிழ்நாடு சேனல் ஒளிபரப்பியது.

உங்கள் நகரத்திலிருந்து (கோயம்புத்தூர்)

ஆக்கிரமிப்பு அபாயத்தில் கோவையின் நூற்றாண்டுகள் பழமையான பாத குட்டை..

Social media influencer ஆகனுமா? அதில் என்ன வருமானம்? மாடல் ஐஸ்வர்யா தரும் டிப்ஸ் இதோ!

இது சாலையா இல்ல ஓடையா? கோவையில் மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் பொதுமக்கள்..!

“மொய் பணம் வேண்டாம் புத்தகங்கள் போதும்..” கோவையில் நடந்த திருமணத்தில் புதுமுயற்சி..!

வானத்தில் இருந்து கொட்டிய ஐஸ்கட்டி..! கோவையில் ஆலங்கட்டி மழையை ரசித்த மக்கள்..!

காதல் மனைவியை 21 நாட்களில் கொலை செய்து நாடகமாடிய கணவன்... அம்பலமான உண்மை..!

கோவையில் தொடர்ந்து உயிரிழக்கும் மயில்கள்.. வன ஆர்வலர்கள் அதிர்ச்சி..!

கண்களுக்கு விருந்தாக நடந்த வள்ளி கும்மியாட்டம்..! காரமடை அருகே கோயில் திருவிழாவில் கோலாகலம்..!

‘டாஸ்மாக் கடைகளை கள்ளுக்கடையா மாத்துங்க..’ - கோவை ஆட்சியரிடம் மனு அளித்த இந்து மக்கள் கட்சியினர்

கோவையில் வெளுத்து வாங்கிய கனமழை.. சாலையில் தேங்கிய மழைநீர்!

கோவை தொட்டிபாளையம் முத்து மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கோலாகலம்! 

இந்நிலையில் முபீன் இறப்பதற்கு சில மணி நேரம் முன்னர் அவரது உடலை முழுவதும் சேவ் செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. வழக்கமாக தற்கொலை படை தாக்குதலில் ஈடுபடும் அடிப்படை வாத சித்தாந்தங்கள் நபர்கள் உடலில் உள்ள ரோமங்களை அகற்றிவிட்டு தாக்குதலில் ஈடுபடுவது வழக்கம் என்பதும் , அந்த நடைமுறையை முபீனும் பின்பற்றி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

Also see... தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை? - விவரம் இதோ

top videos
  • புதுகை ஸ்ரீவெங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேக விழா.. முளைப்பாரி எடுத்த பெண்கள்..
  • அதென்ன பாதிரி மாம்பழம்..? மயிலாடுதுறையில் ஃபேமஸாகும் புது மாம்பழ வகை..!
  • புதுவை கௌசிக பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக உற்சவம்!
  • திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா..! பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!
  • விராலிமலை முருகன் கோயில் வைகாசி தேரோட்டம்.. திரளான பக்தர்கள் தரிசனம்..
  • சிசிடிவி காட்சிகளில் இருந்த உடைகளும், கார் வெடிப்பின் போது இருந்த உடைகளும் வேறு வேறு என்பதும் , உடலை சேவ் செய்து குளித்து ,வேறு உடைமாற்றி தொழுகை செய்து விட்டு சென்று இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் முபீனுக்கு வழிகாட்டியாக இருந்தது யார் என்பது குறித்தும் விசாரணையானது நடைபெற்று வருகின்றது.

    Tags:Attack, Blast, Car, Coimbatore, Suicide

    முக்கிய செய்திகள்