சென்னையில் ஆவின் பச்சை வண்ண பால் பாக்கெட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆவின் பச்சை வண்ண பாக்கெட் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது என்றும்,
அதனால் லிட்டருக்கு கூடுதலாக 16 ரூபாய் கொடுத்து, 60 ரூபாய்க்கு ஆரஞ்சு வண்ண பாக்கெட் பாலை வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
74ஆவது குடியரசு தின விழா.. தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர். என்.ரவி!
மகனின் ஜாமீனுக்காக செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.. சென்னையில் பரபரப்பு
சென்னை : திருமணத்திற்கு சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு..
சென்னை: ரயில் முன் பாய்ந்த காதல் ஜோடி.. பலத்த காயத்துடன் உயிருக்கு போராடும் காதலன்!
குடியரசு தின அணிவகுப்பு : பரிசை தட்டிச்சென்ற காவல்துறை.. விருது வழங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி
தேநீர் விருந்து : ஸ்டாலினுக்கு போனில் அழைப்பு விடுத்த ஆளுநர்.. பங்கேற்பாரா முதலமைச்சர்?
எம்.பி ஆகதான் காங்கிரஸை ஆதரிக்கிறேனா? கமல்ஹாசன் சொன்ன சூசக பதில்!
பள்ளி வாகன ஓட்டையில் தவறி விழுந்து உயிரிழந்த மாணவியின் வழக்கு.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
மதுரை டூ சென்னை.. 2 மணி நேரத்தில் வந்து சேர்ந்த இதயம்.. பர பர நிமிடங்கள்..!
அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்த மத்திய அரசு அனுமதி!
''தமிழ்நாடு வாழ்க''.. குடியரசு தின விழாவில் செய்தித்துறை சார்பில் அணிவகுத்த வாகனம்!
மேலும், பச்சை உறை பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முதன்மை காரணம் ஆரஞ்சு உறை பால் விலை உயர்த்தப்பட்டது தான் என்றும் ஆரஞ்சு பால் விலை லிட்டர் ரூ.48-லிருந்து ரூ.60 ஆக உயர்த்தப்பட்டதால் அதன் தேவை குறைந்து விட்டது. ஆகையால் தான் குறைந்த விலையில் கிடைக்கும் பச்சை உறை பால் தேவை அதிகரித்திருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.
அதுமட்டுமின்றி, பச்சை உறை பாலுக்கான தேவை அதிகரித்திருப்பது ஆவின் நிர்வாகத்திற்கு தெரியும் என்றும், பச்சை உறை பாலை பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப தட்டுப்பாடின்றி ஆவின் வினியோகித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறியதால் ஒருபுறம் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மறுபுறம் தனியார் நிறுவனங்களுக்கு லாபமடைந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
வாடிக்கையாளர்களை ஆவின் ஏமாற்றக்கூடாது எனவும், பச்சை உறை பால் வினியோகத்தை குறைந்தது 20% அதிகரிக்க வேண்டும். அதில் ஏதேனும் தடை இருந்தால் ஆரஞ்சு உறை பாலின் விலையை முன்பிருந்தவாறே லிட்டர் ரூ.48 என்ற அளவுக்கு குறைக்க ஆவின் நிறுவனம் முன்வர வேண்டும் என தனது ட்விட்டர் பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Aavin, Anbumani, Chennai, Milk Production