PREVNEXT
முகப்பு / செய்தி / சென்னை / சென்னை: ரயில் முன் பாய்ந்த காதல் ஜோடி.. பலத்த காயத்துடன் உயிருக்கு போராடும் காதலன்!

சென்னை: ரயில் முன் பாய்ந்த காதல் ஜோடி.. பலத்த காயத்துடன் உயிருக்கு போராடும் காதலன்!

இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் வாலிபர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி விபரீத முடிவு

ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி விபரீத முடிவு

சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் அருகே ரயில் முன் விழுந்து காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்த பரங்கிமலை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயில் முன் காதல் ஜோடி விழுந்தனர். இதில் சுமார் 19 வயது மதிக்கத்தக்க இளம் பெண் தலையில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்தில் பலியானார். வாலிபர் தலையில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டு இருந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வரைந்து சென்று உயிருக்கு போராடி கொண்டு இருந்த வாலிபரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். பலியான பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மாம்பலம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரவன் மற்றும் போலீசார் பலியான பெண் மற்றும் உயிருக்கு போராடும் வாலிபர் யார் என விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அந்த இளைஞர் மடிப்பாக்கம் உள்ளகரம் பகுதியைச் சேர்ந்த இளங்கோ (வயது-20) என்பதும் இவர் ஜெயின் கல்லூரியில் மூன்றாம் ஆண்டுபடித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது. உயிரிழந்த பெண் ஐஸ்வர்யா‌ என்பதும் அவர் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

உங்கள் நகரத்திலிருந்து (சென்னை)

பரோட்டாவுக்கு பாயா கேட்டு ஓட்டலில் ரகளை... 2 போலீஸ்காரர்கள் சஸ்பென்ட்.

மூலிகை ஆயில் பெயரில் மோசடி : தொழிலதிபர்களிடம் ரூ.20 கோடி சுருட்டிய நைஜீரிய கும்பல் - சிக்கியது எப்படி?

சென்னையில் மின் கம்பிகளை புதைவிட கம்பிகளாக அமைக்கும் பணிகள் தீவிரம்: அமைச்சர் தகவல்

மது விருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை : தட்டிக்கேட்ட ஆண் நண்பருக்கு மண்டை உடைப்பு - சென்னையில் பகீர் சம்பவம்!

ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளையடித்த பெண்.. ரஜினி, தனுஷ் வீடுகளிலும் கைவரிசையா?

தலைநகரை கலைநகராக்கும் முயற்சி - மெரினா லூப் சாலையில் வண்ணங்களை தீட்டும் ஓவியர்கள்

சொத்து வரி கட்ட கடைசி நாள் இதுதான்... தவறினால் அபராதம்.. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை..!

சென்னையில் 4 நாட்களுக்கு ட்ரோன் பறக்க தடை..!

Ind vs Aus : இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி - கள்ளச்சந்தையில் டிக்கெட்டுகளை விற்ற 13 பேர் கைது

ஒரு மாத ரகசிய விசாரணை.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு கொள்ளையில் மேலும் ஒருவர் அதிரடி கைது!

சென்னையில் தொடங்கிய ஜி-20 நிதித்துறை சார்ந்த கருத்தியல் மாநாடு.. 80 பிரதிநிதிகள் பங்கேற்பு...


 

Tags:Crime News, Lovers, Sucide

முக்கிய செய்திகள்