நீண்ட நாட்களாக நீதிமன்ற விசாரணையின் போது வழக்குகளில் ஆஜராகாமல் இருந்த ரவுடி வெள்ளை பிரகாஷை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து பயங்கரமான வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
சென்னை எருக்கஞ்சேரியைச் சேர்ந்த A ரவுடியானவர் பிரகாஷ்(எ) வெள்ளை பிரகாஷ். இவர் மீது சிபிசிஐடி உட்பட சென்னையின் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, ஆட்கடத்தல் கட்டப்பஞ்சாயத்து, கஞ்சா கடத்தல்,ஆயுத தடைச் சட்டம், வெடிபொருள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு வழக்கு பதிவுகள் நிலுவையில் உள்ளன. நீண்ட நாட்களாக நீதிமன்ற விசாரணையின் போது வழக்குகளில் ஆஜராகாமல் இருந்த ரவுடி வெள்ளை பிரகாஷை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் தீவிர குற்றத்தடுப்பு போலீசாரும் ரவுடி வெள்ளை பிரகாஷை பல மாதங்களாக தேடி வந்தனர். இதனையடுத்து பூந்தமல்லி அருகே ரவுடி வெள்ளை பிரகாஷ் தனது நண்பருடன் தலைமறைவாக இருப்பதும் குற்றச்செயலில் ஈடுபட திட்டமிட்டு இருப்பதும் தெரிய வந்ததையடுத்து தீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் நேற்று நள்ளிரவு ரவுடி வெள்ளை பிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளியான அப்பு ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
சென்னை: ரயில் முன் பாய்ந்த காதல் ஜோடி.. பலத்த காயத்துடன் உயிருக்கு போராடும் காதலன்!
மகனின் ஜாமீனுக்காக செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.. சென்னையில் பரபரப்பு
அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்த மத்திய அரசு அனுமதி!
''தமிழ்நாடு வாழ்க''.. குடியரசு தின விழாவில் செய்தித்துறை சார்பில் அணிவகுத்த வாகனம்!
எம்.பி ஆகதான் காங்கிரஸை ஆதரிக்கிறேனா? கமல்ஹாசன் சொன்ன சூசக பதில்!
குடியரசு தின அணிவகுப்பு : பரிசை தட்டிச்சென்ற காவல்துறை.. விருது வழங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி
சென்னை : திருமணத்திற்கு சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு..
74ஆவது குடியரசு தின விழா.. தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர். என்.ரவி!
தேநீர் விருந்து : ஸ்டாலினுக்கு போனில் அழைப்பு விடுத்த ஆளுநர்.. பங்கேற்பாரா முதலமைச்சர்?
மதுரை டூ சென்னை.. 2 மணி நேரத்தில் வந்து சேர்ந்த இதயம்.. பர பர நிமிடங்கள்..!
பள்ளி வாகன ஓட்டையில் தவறி விழுந்து உயிரிழந்த மாணவியின் வழக்கு.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
ரவுடிகள் தலைமறைவாக இருந்த இடத்தை சோதனை செய்தபோது 40 நாட்டு வெடிகுண்டுகள், 36 பட்டாக்கத்திகள், ஒரு துப்பாக்கி மற்றும் 12 தோட்டாக்கள் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கைது செய்யப்பட்ட இரண்டு ரவுடிகளையும் கொடுங்கையூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க : தமிழகத்தில் 5, 7ஆம் தேதிகளில் மிரட்டப்போகும் கனமழை... இந்திய வானிலை மையம் அலெர்ட்!
தீவிர குற்ற தடுப்பு போலீசார் கைது செய்யப்பட்ட இரண்டு ரவுடிகளையும் கொடுங்கையூர் போலீசாரிடம் ஒப்படைக்கும் போது இரண்டு ரவுடிகளும் தப்பி ஓட முயற்சி செய்ததில் இருவரும் கீழே விழுந்துள்ளனர். இதனால் இரண்டு ரவுடிகளுக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட இரண்டு ரவுடிகளையும் கொடுங்கையூர் போலீசார் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் தலைமறைவாக இருந்த வெள்ளை பிரகாஷ் மற்றும் அப்பு ஆகிய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் தீட்டிய சதி திட்டம்? என்ன யாரை கொலை செய்வதற்காக அவர்கள் நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் கத்தியுடன் பதுங்கி இருந்தார்கள்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Chennai, Tamil News