சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சத்யபாலன் இவர் அதே பகுதியில் தனது தந்தை காலத்தில் இருந்து 83 வருடங்களாக சலூன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி இரவு பாக்சர் பிரசாந்த் என்ற நபர் தன்னுடைய கடையில் பணிபுரியும் ஊழியரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அது மட்டுமில்லாமல் கண்ணத்தில் அறைந்திருக்கிறார். அதற்கு அடுத்தப்படியாக பக்கத்தில் இருக்கக்கூடிய டீக்கடையிலும் பணம் கேட்டு குடிபோதையில் தொந்தரவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக சலூன் கடை உரிமையாளர் சத்யபாலன் புளியந்தோப்பு காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் குடிபோதையில் இருந்த நபரை போலீசார் விசாரித்து அனுப்பி வைத்துள்ளனர். குறிப்பாக கடையில் கத்தியை வைத்துக்கொண்டு பணிபுரியும் நேரத்தில் பிரச்சினை செய்துள்ளார். இந்த சமயத்தில் கத்தியால் தவறுதலாக பணியை செய்து விட்டால் கஸ்டமர் மட்டும் பாதிக்கப்படாமல் நாங்களும் ஜெயிலுக்கு போக வேண்டிய சூழ்நிலை உருவாகும், என சலூன் கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னை நீலாங்கரையில் 12ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு விபரீத முடிவு..!
குடியரசு தின அணிவகுப்பு : பரிசை தட்டிச்சென்ற காவல்துறை.. விருது வழங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி
அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்த மத்திய அரசு அனுமதி!
எம்.பி ஆகதான் காங்கிரஸை ஆதரிக்கிறேனா? கமல்ஹாசன் சொன்ன சூசக பதில்!
சென்னை: ரயில் முன் பாய்ந்த காதல் ஜோடி.. பலத்த காயத்துடன் உயிருக்கு போராடும் காதலன்!
74ஆவது குடியரசு தின விழா.. தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர். என்.ரவி!
தேநீர் விருந்து : ஸ்டாலினுக்கு போனில் அழைப்பு விடுத்த ஆளுநர்.. பங்கேற்பாரா முதலமைச்சர்?
மகனின் ஜாமீனுக்காக செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.. சென்னையில் பரபரப்பு
''தமிழ்நாடு வாழ்க''.. குடியரசு தின விழாவில் செய்தித்துறை சார்பில் அணிவகுத்த வாகனம்!
பள்ளி வாகன ஓட்டையில் தவறி விழுந்து உயிரிழந்த மாணவியின் வழக்கு.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
சென்னை : திருமணத்திற்கு சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு..
மதுரை டூ சென்னை.. 2 மணி நேரத்தில் வந்து சேர்ந்த இதயம்.. பர பர நிமிடங்கள்..!
அது மட்டுமில்லாமல் காவல் நிலையத்தில் தான் சென்னை மாநகராட்சி மேயரின் அண்ணன் எனவும், ஆகவே உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என குடிபோதையில் தவறுதலாக அதிகாரிகளை பெயர்களை பயன்படுத்தியுள்ளார். இது தொடர்பாகவும் போலீசார் அந்த நபரை விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
செய்தியாளர் : அசோக்குமார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Crime News, Mayor Priya