அரியலூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கண்டியங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 3 வருடமாக தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். மேலும், சிறுமி செல்லும் இடமெல்லாம் தொல்லை கொடுத்தும் வந்துள்ளார்.
இதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்து வந்தாள். இதனால் ஆத்திரத்தில் சிறுமி பழிவாங்க வேண்டும் என்று ஜெயக்குமார் சுற்றிவந்துள்ளார். மேலும், அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து ஜெயக்குமார் காத்துக்கொண்டிருந்தார்.
முந்திரிக்காடு வீட்டில் சிறுமியை 10 நாட்கள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்: தாயும் உடந்தையாக இருந்தது அம்பலம்!
10 ஆம் வகுப்பு மாணவி 8 மாதம் கர்ப்பம் : 9 ஆம் வகுப்பு மாணவன் போக்சோவில் கைது!
21 பைக்.. ரூ.6 லட்சம் மதிப்பு.. ஜெயங்கொண்டத்தில் சிக்கிய பலே திருடன்
உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்து பறவைகளை வேட்டையாடிய 3 பேர் அரியலூரில் கைது
ஸ்ரீபுரந்தான் பெரியநாயகி சமேத உடனுறை பிரகதீஸ்வரர் கோவில் ஆருத்ரா தரிசனம்..!
நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை.. ஆனால் கெடுக்கலாமா என சதி செய்கிறார்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நடுரோட்டில் லாரியை நிறுத்தி மது அருந்தும் ஓட்டுநர்கள்...அதிகரிக்கும் விபத்துகள்...நடவடிக்கை எடுக்கப்படுமா?
பஸ் ஓட்டிக்கொண்டே செல்போனுக்கு சார்ஜ்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 52 பேர் காயம்
பெட்ரோல் திருட்டு.. இளைஞரை மரத்தில் கட்டிவைத்து அடித்த கொடூரம் - அரியலூரில் அரங்கேறிய கொடுமை
நகை, பணத்துக்காக முதியவர் அடித்துக் கொலை.. அரியலூரில் மர்ம நபர்கள் வெறிச்செயல்..
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண் பாலியல் வன்கொடுமை... அரியலூர் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!
இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிறுமியை கடத்தினார். மேலும், முந்திரி காட்டில் தனி வீட்டில் வைத்து சிறுமியை அடைத்து வைத்து கட்டாயப்படுத்தி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த கடத்தலுக்கு ஜெயக்குமாரின் தாய் சாந்தியும் உடந்தையாக இருந்துள்ளார்.
இதற்கிடையில், சிறுமியின் பெற்றோர் தங்களது மகளை காணவில்லை என போலீசில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதுதொடர்பாக தலைமறைவாக இருந்த ஜெயக்குமாரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் சாந்தியையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
சினிமாவில் சைக்கோக்களை மையமாக வைத்து வெளியாகும் திரைப்படங்களில் வரும் சம்பவம் போல சிறுமியை கடத்தி கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த நபரும், அவருக்கு உடந்தையாக இருந்த தாயும் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தியாளர் : கலைவாணன் - ஜெயங்கொண்டம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Ariyalur, Crime News, Local News