PREVNEXT
முகப்பு / செய்தி / அரியலூர் / டியூசன் டீச்சர் செல்போனுக்கு வந்த ஆபாச அழைப்பு - மர்மநபரை கைது செய்த போலீஸ்

டியூசன் டீச்சர் செல்போனுக்கு வந்த ஆபாச அழைப்பு - மர்மநபரை கைது செய்த போலீஸ்

Ariyalur | ஜெயங்கொண்டம் அருகே அபாகஸ் டியூசன் ஆசிரியையிடம் போனில் ஆபாசமாக பேசிய வரை போலீசார் கைது செய்தனர்.

ஜெயக்கொண்டம் - கைதானவர்

ஜெயக்கொண்டம் - கைதானவர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஸ்டேட் பேங்க் காலனியில் வசிக்கும் பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளி சிறுவர்களுக்கு அபாகஸ் கிளாஸ் எடுத்து வருகிறார். திருமணமான இவர் கருத்துவேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

இதனை அறிந்த மர்மநபர் ஒருவர் அந்த பெண்ணின் செல்போனுக்கு தொடர்புக் கொண்டு ஆபாசமாக பேசியுள்ளார். மேலும் தன்னுடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்தவர்  மர்மநபரின் செல்போன் பேச்சு குறித்து உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து  அந்தப்பெண் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த  மர்ம நபர் குறித்து விசாரணையை மேற்கொண்டனர்.

ஆசிரியைக்கு வந்த செல்போன் அழைப்பை கொண்டு மர்ம நபரின் மொபைல் எண்ணை போலீஸார் ட்ரேஸ் செய்தனர். விசாரணையில் ஆசிரியையிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய நபர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கடாரம் கொண்டான் கிராமத்தை சேர்ந்த சேர்ந்த கண்ணன் என்பது தெரியவந்தது.

உங்கள் நகரத்திலிருந்து (அரியலூர்)

21 பைக்.. ரூ.6 லட்சம் மதிப்பு.. ஜெயங்கொண்டத்தில் சிக்கிய பலே திருடன்

பெட்ரோல் திருட்டு.. இளைஞரை மரத்தில் கட்டிவைத்து அடித்த கொடூரம் - அரியலூரில் அரங்கேறிய கொடுமை

ஸ்ரீபுரந்தான் பெரியநாயகி சமேத உடனுறை பிரகதீஸ்வரர் கோவில் ஆருத்ரா தரிசனம்..!

10 ஆம் வகுப்பு மாணவி 8 மாதம் கர்ப்பம் : 9 ஆம் வகுப்பு மாணவன் போக்சோவில் கைது!

நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை.. ஆனால் கெடுக்கலாமா என சதி செய்கிறார்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நடுரோட்டில் லாரியை நிறுத்தி மது அருந்தும் ஓட்டுநர்கள்...அதிகரிக்கும் விபத்துகள்...நடவடிக்கை எடுக்கப்படுமா?

நகை, பணத்துக்காக முதியவர் அடித்துக் கொலை.. அரியலூரில் மர்ம நபர்கள் வெறிச்செயல்..

பஸ் ஓட்டிக்கொண்டே செல்போனுக்கு சார்ஜ்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 52 பேர் காயம்

முந்திரிக்காடு வீட்டில் சிறுமியை 10 நாட்கள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்: தாயும் உடந்தையாக இருந்தது அம்பலம்!

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண் பாலியல் வன்கொடுமை... அரியலூர் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!

உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்து பறவைகளை வேட்டையாடிய 3 பேர் அரியலூரில் கைது

Also see... முதலைகள் இடமாற்றத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி...

இதனையடுத்து கடாரம் கொண்டான் கிராமத்துக்கு விரைந்த போலீஸார் கண்ணனை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags:Ariyalur, Sexual harassment

முக்கிய செய்திகள்