PREVNEXT
முகப்பு / செய்தி / அரியலூர் / செருப்பால் அடித்த மாமனார்.. தீக்குளித்த மருமகள்.. அரியலூரில் விபரீதம்

செருப்பால் அடித்த மாமனார்.. தீக்குளித்த மருமகள்.. அரியலூரில் விபரீதம்

தீ காயங்களுடன் இளம் பெண் மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இது தற்கொலை முயற்சியா அல்லது கொலை முயற்சியா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை முயற்சி

தற்கொலை முயற்சி

அரியலூர் அருகே மாமனார் செருப்பால் அடித்து தாக்கியதாலும் தொடர்ந்து குடும்ப வன்முறையை நிகழ்த்தி வந்ததாலும் மருமகள் தன் உடலில் தீ வைத்து தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே வெத்தியார்வெட்டு கிராமத்தை சேர்ந்தவர் விஜய் பிரகாஷ் மற்றும்  அபிராமி  தம்பதியினர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் உள்ளார். அபிராமி தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்த தனது குழந்தையை அடித்துள்ளார்.

இதனைப் பார்த்த அபிராமியின் மாமனார் கலியமூர்த்தி, மாமியார் வசந்தா ஆகிய இருவரும் அபிராமியை திட்டி உள்ளனர். மேலும் அபிராமியின் கணவர் விஜய் பிரகாசும் திட்டியதாக தெரிகிறது. இதையடுத்து அவர் உடலில் தீவைத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த  அபிராமி தஞ்சை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உங்கள் நகரத்திலிருந்து (அரியலூர்)

ஸ்ரீபுரந்தான் பெரியநாயகி சமேத உடனுறை பிரகதீஸ்வரர் கோவில் ஆருத்ரா தரிசனம்..!

21 பைக்.. ரூ.6 லட்சம் மதிப்பு.. ஜெயங்கொண்டத்தில் சிக்கிய பலே திருடன்

நகை, பணத்துக்காக முதியவர் அடித்துக் கொலை.. அரியலூரில் மர்ம நபர்கள் வெறிச்செயல்..

10 ஆம் வகுப்பு மாணவி 8 மாதம் கர்ப்பம் : 9 ஆம் வகுப்பு மாணவன் போக்சோவில் கைது!

நடுரோட்டில் லாரியை நிறுத்தி மது அருந்தும் ஓட்டுநர்கள்...அதிகரிக்கும் விபத்துகள்...நடவடிக்கை எடுக்கப்படுமா?

பஸ் ஓட்டிக்கொண்டே செல்போனுக்கு சார்ஜ்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 52 பேர் காயம்

உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்து பறவைகளை வேட்டையாடிய 3 பேர் அரியலூரில் கைது

நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை.. ஆனால் கெடுக்கலாமா என சதி செய்கிறார்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண் பாலியல் வன்கொடுமை... அரியலூர் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!

முந்திரிக்காடு வீட்டில் சிறுமியை 10 நாட்கள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்: தாயும் உடந்தையாக இருந்தது அம்பலம்!

பெட்ரோல் திருட்டு.. இளைஞரை மரத்தில் கட்டிவைத்து அடித்த கொடூரம் - அரியலூரில் அரங்கேறிய கொடுமை

இந்நிலையில் வீட்டில் ஏற்பட்ட தகராறில் அபிராமியை மாமனார் கலியமூர்த்தி செருப்பால் அடித்து மண்ணெண்ணையை அபிராமி மீது ஊற்றியதாக அபிராமி தஞ்சை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையிலிருந்தவாறே வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கலியமூர்த்தியை கைது செய்தனர். மேலும், அபிராமி தற்கொலைக்கு முயற்சித்தாரா அல்லது மாமனார் கொலை முயற்சியில் ஈடுபட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர்: கலைவானன் - அரியலூர்

Tags:Ariyalur, Domestic Violence

முக்கிய செய்திகள்