PREVNEXT
முகப்பு / செய்தி / அரியலூர் / ஸ்ரீபுரந்தான் பெரியநாயகி சமேத உடனுறை பிரகதீஸ்வரர் கோவில் ஆருத்ரா தரிசனம்..!

ஸ்ரீபுரந்தான் பெரியநாயகி சமேத உடனுறை பிரகதீஸ்வரர் கோவில் ஆருத்ரா தரிசனம்..!

அரியலூரில் வெளிநாட்டிலிருந்து மீட்கப்பட்ட ஐம்பொன்னாலான நடராஜர் சிலையை அறநிலையத்துறை அனுமதியுடன் பொதுமக்கள் வழிபாட்டிற்காக கோவிலுக்கு கொண்டு சென்றனர்.

அரியலூர் ஆருத்ரா தரிசனம்

அரியலூர் ஆருத்ரா தரிசனம்

அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பெரியநாயகி சமேத உடனுறை பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோயிலில் இருந்து கடத்தப்பட்ட நடராஜர் சிலை கடந்த பல வருடங்களுக்கு முன்பு காணாமல் போனது. இதனை அடுத்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை குருவாலப்பர் கோவிலில் பாதுகாப்பு பெட்டகத்தில்  வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆருத்ரா தரிசன விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என கிராம பொதுமக்கள் முடிவு செய்து, அறநிலையத்துறையில்‌ உரிய அனுமதி பெற்று விழாவிற்காக   பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த நடராஜர் சிலை  ஸ்ரீபுரந்தான் பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து கிராம மக்கள் சார்பில் நடராஜருக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. இதனையடுத்து நடராஜர் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உங்கள் நகரத்திலிருந்து (அரியலூர்)

பஸ் ஓட்டிக்கொண்டே செல்போனுக்கு சார்ஜ்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 52 பேர் காயம்

பெட்ரோல் திருட்டு.. இளைஞரை மரத்தில் கட்டிவைத்து அடித்த கொடூரம் - அரியலூரில் அரங்கேறிய கொடுமை

நடுரோட்டில் லாரியை நிறுத்தி மது அருந்தும் ஓட்டுநர்கள்...அதிகரிக்கும் விபத்துகள்...நடவடிக்கை எடுக்கப்படுமா?

நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை.. ஆனால் கெடுக்கலாமா என சதி செய்கிறார்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நகை, பணத்துக்காக முதியவர் அடித்துக் கொலை.. அரியலூரில் மர்ம நபர்கள் வெறிச்செயல்..

10 ஆம் வகுப்பு மாணவி 8 மாதம் கர்ப்பம் : 9 ஆம் வகுப்பு மாணவன் போக்சோவில் கைது!

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண் பாலியல் வன்கொடுமை... அரியலூர் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!

21 பைக்.. ரூ.6 லட்சம் மதிப்பு.. ஜெயங்கொண்டத்தில் சிக்கிய பலே திருடன்

முந்திரிக்காடு வீட்டில் சிறுமியை 10 நாட்கள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்: தாயும் உடந்தையாக இருந்தது அம்பலம்!

உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்து பறவைகளை வேட்டையாடிய 3 பேர் அரியலூரில் கைது

ஸ்ரீபுரந்தான் பெரியநாயகி சமேத உடனுறை பிரகதீஸ்வரர் கோவில் ஆருத்ரா தரிசனம்..!

வீதி உலா முடிந்தபின் மீண்டும் நடராஜர் சிலை குருவாலப்பர் கோவில் பாதுகாப்பு பெட்டகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.

மேலும் செண்டை மேளங்கள் முழங்க நடராஜர் முக்கிய வீதியில் வழியாக பொதுமக்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

செய்தியாளர்: கலைவாணன், அரியலூர்

Tags:Ariyalur

முக்கிய செய்திகள்