PREVNEXT
முகப்பு / செய்தி / அரியலூர் / நடுரோட்டில் லாரியை நிறுத்தி மது அருந்தும் ஓட்டுநர்கள்...அதிகரிக்கும் விபத்துகள்...நடவடிக்கை எடுக்கப்படுமா?

நடுரோட்டில் லாரியை நிறுத்தி மது அருந்தும் ஓட்டுநர்கள்...அதிகரிக்கும் விபத்துகள்...நடவடிக்கை எடுக்கப்படுமா?

Ariyalur News | சாலையில் லாரிகளை நிறுத்திவிட்டு மது அருந்துவதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன் தொடர் விபத்துக்களும் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் வேதனை

மது அருந்திவிட்டு லாரியை இயக்கும் ஓட்டுநர்

மது அருந்திவிட்டு லாரியை இயக்கும் ஓட்டுநர்

அரியலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் சிமெண்ட் ஆலைகள்  அதிகளவில் செயல்பட்டு வருகின்றன. இதில் கயர்லாபாத் என்ற இடத்தில் அரசு சிமெண்ட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி  செல்வதற்கு வெளி மாவட்டத்தில் இருந்து ஏராளமான லாரிகள் வந்து செல்கின்றன. இரவு நேரங்களில் லாரியில் சிமெண்ட் மூட்டைகளை  ஏற்றிக்கொண்டு சாலையில் லாரியை நிறுத்திவிட்டு மதுபான கடைக்கு செல்கின்றனர்.

அவ்வாறு லாரிகளை நிறுத்திச் செல்வதால் வாகன நெரிசல் ஏற்படுகின்றது. மேலும் சுமார் அரை மணி  வரை மது அருந்திவிட்டு மீண்டும் வாகனத்தை எடுத்துச் செல்கின்றனர். அவ்வாறு இயக்கிச்  செல்வதன் மூலம் சமீப காலங்களில் லாரிகளால் இரவு நேரங்களில் அதிக விபத்துகள் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். லாரி ஓட்டுனர்களை இரவு நேரங்களில் மது அருந்தி இருக்கிறார்கள் என்பதை பரிசோதிக்க வேண்டும் எனவும்  அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உங்கள் நகரத்திலிருந்து (அரியலூர்)

நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை.. ஆனால் கெடுக்கலாமா என சதி செய்கிறார்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நடுரோட்டில் லாரியை நிறுத்தி மது அருந்தும் ஓட்டுநர்கள்...அதிகரிக்கும் விபத்துகள்...நடவடிக்கை எடுக்கப்படுமா?

உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்து பறவைகளை வேட்டையாடிய 3 பேர் அரியலூரில் கைது

பஸ் ஓட்டிக்கொண்டே செல்போனுக்கு சார்ஜ்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 52 பேர் காயம்

ஸ்ரீபுரந்தான் பெரியநாயகி சமேத உடனுறை பிரகதீஸ்வரர் கோவில் ஆருத்ரா தரிசனம்..!

21 பைக்.. ரூ.6 லட்சம் மதிப்பு.. ஜெயங்கொண்டத்தில் சிக்கிய பலே திருடன்

பெட்ரோல் திருட்டு.. இளைஞரை மரத்தில் கட்டிவைத்து அடித்த கொடூரம் - அரியலூரில் அரங்கேறிய கொடுமை

முந்திரிக்காடு வீட்டில் சிறுமியை 10 நாட்கள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்: தாயும் உடந்தையாக இருந்தது அம்பலம்!

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண் பாலியல் வன்கொடுமை... அரியலூர் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!

10 ஆம் வகுப்பு மாணவி 8 மாதம் கர்ப்பம் : 9 ஆம் வகுப்பு மாணவன் போக்சோவில் கைது!

நகை, பணத்துக்காக முதியவர் அடித்துக் கொலை.. அரியலூரில் மர்ம நபர்கள் வெறிச்செயல்..

மேலும் அரியலூர் மாவட்டத்தில் இதேபோன்று ஆங்காங்கே லாரியை நிறுத்திவிட்டு மது அருந்தச் செல்வது வாடிக்கை ஆகிவிட்டதாகவும் இதுகுறித்து பொதுமக்கள் லாரி ஓட்டுனர்களிடம் கேட்கும்போது கோபமாக பேசுவது வாடிக்கையாகி விட்டதாகவும்  வேதனையாக கூறுகின்றனர். இது குறித்து காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க்க வேண்டும் என்றும் மது அருந்திவிட்டு லாரி ஓட்டுநர்கள் வாகனத்தை இயக்குகின்றனரா  என்பதை பரிசோதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags:Ariyalur, Drunk an drive

முக்கிய செய்திகள்