PREVNEXT
முகப்பு / செய்தி / அரியலூர் / 10-ம் வகுப்பு மாணவிக்கு லவ் டார்ச்சர்.. கணக்கு வாத்தியார் அட்டகாசம் - போக்சோவில் கைது

10-ம் வகுப்பு மாணவிக்கு லவ் டார்ச்சர்.. கணக்கு வாத்தியார் அட்டகாசம் - போக்சோவில் கைது

மாணவியை பள்ளியில் இருந்து இடையில் நிறுத்தி விட்ட பிறகும் தொடர்ந்து ஆசிரியர் மாணவியை போனில் தொடர்பு கொண்டு தொல்லை அளித்துள்ளார்.

ஆசிரியர்

ஆசிரியர்

அரியலூரில், பத்தாம் வகுப்பு மாணவியை காதலிக்க வற்புறுத்திய ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே  தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியின் உரிமையாளரின் உறவினரான தினேஷ் அதேப்பள்ளியில் கணித  ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் அதே பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவியை காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது  சம்பந்தமாக மாணவியின் பெற்றோர் பலமுறை கண்டித்தும் அதனை பொருட்படுத்தாமல் போனிலும் நேரிலும் வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெண்ணின் பெற்றோர்கள் மாணவியை பள்ளியில் இருந்து இடையில் நிறுத்தி விட்டனர்.

உங்கள் நகரத்திலிருந்து (அரியலூர்)

பெட்ரோல் திருட்டு.. இளைஞரை மரத்தில் கட்டிவைத்து அடித்த கொடூரம் - அரியலூரில் அரங்கேறிய கொடுமை

நடுரோட்டில் லாரியை நிறுத்தி மது அருந்தும் ஓட்டுநர்கள்...அதிகரிக்கும் விபத்துகள்...நடவடிக்கை எடுக்கப்படுமா?

10 ஆம் வகுப்பு மாணவி 8 மாதம் கர்ப்பம் : 9 ஆம் வகுப்பு மாணவன் போக்சோவில் கைது!

முந்திரிக்காடு வீட்டில் சிறுமியை 10 நாட்கள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்: தாயும் உடந்தையாக இருந்தது அம்பலம்!

21 பைக்.. ரூ.6 லட்சம் மதிப்பு.. ஜெயங்கொண்டத்தில் சிக்கிய பலே திருடன்

நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை.. ஆனால் கெடுக்கலாமா என சதி செய்கிறார்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஸ்ரீபுரந்தான் பெரியநாயகி சமேத உடனுறை பிரகதீஸ்வரர் கோவில் ஆருத்ரா தரிசனம்..!

நகை, பணத்துக்காக முதியவர் அடித்துக் கொலை.. அரியலூரில் மர்ம நபர்கள் வெறிச்செயல்..

பஸ் ஓட்டிக்கொண்டே செல்போனுக்கு சார்ஜ்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 52 பேர் காயம்

உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்து பறவைகளை வேட்டையாடிய 3 பேர் அரியலூரில் கைது

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண் பாலியல் வன்கொடுமை... அரியலூர் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!

ALSO READ | கருமாரியம்மன் கோவிலில் தேர் இழுத்த அமைச்சர் நாசர்...

இருந்தபோதிலும் தினேஷ் தொடர்ந்து போனில் மாணவியை தொடர்பு கொண்டு பேசி வந்ததாக கூறப்படுகிறது.  இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர்கள் , ஆசிரியர் தினேஷ் குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதன் அடிப்படையில், போலீசார், தினேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

செய்தியாளர்: கலைவாணன் (அரியலூர்)

Tags:Ariyalur, Child harassment, Crime News, Pocso, Teacher

முக்கிய செய்திகள்