PREVNEXT
முகப்பு / செய்தி / அரியலூர் / அரியலூர் அருகே குட்கா கைப்பற்றப்பட்ட வழக்கில் 4 பேர் கைது

அரியலூர் அருகே குட்கா கைப்பற்றப்பட்ட வழக்கில் 4 பேர் கைது

Ariyalur | அரியலூரில் குட்கா கைப்பற்றப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

குட்கா வழக்கில் கைதான 4 பேர்

குட்கா வழக்கில் கைதான 4 பேர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சிலால் கிராமத்தில் கடந்த 23-ந் தேதி இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தினர். இதனால் பயமடைந்த டிரைவர் லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பி ஓடினார்.

இதையடுத்து அந்த லாரியை போலீசார் சோதனை செய்தபோது துணிக்கழிவு மூட்டைகளுக்கு கீழே வைத்து பதுக்கி கடத்தி வரப்பட்ட 73 மூட்டை குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, லாரியுடன் குட்கா பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்தநிலையில் கடந்த 26-ந் தேதி லாரியில் காபி கொட்டை தோல் மூட்டைகளுக்கு கீழே பதுக்கி கொண்டு வரப்பட்ட 83 மூட்டை குட்கா பொருட்கள் கும்பகோணம் கொண்டு செல்லப்படும் வழியில் மதனத்தூர் போலீஸ் சோதனைச்சாவடியில் கைப்பற்றப்பட்டு லாரி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த லாரியை ஓட்டி வந்த 2 வடமாநில வாலிபர்கள் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

உங்கள் நகரத்திலிருந்து (அரியலூர்)

10 ஆம் வகுப்பு மாணவி 8 மாதம் கர்ப்பம் : 9 ஆம் வகுப்பு மாணவன் போக்சோவில் கைது!

நடுரோட்டில் லாரியை நிறுத்தி மது அருந்தும் ஓட்டுநர்கள்...அதிகரிக்கும் விபத்துகள்...நடவடிக்கை எடுக்கப்படுமா?

நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை.. ஆனால் கெடுக்கலாமா என சதி செய்கிறார்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெட்ரோல் திருட்டு.. இளைஞரை மரத்தில் கட்டிவைத்து அடித்த கொடூரம் - அரியலூரில் அரங்கேறிய கொடுமை

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண் பாலியல் வன்கொடுமை... அரியலூர் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!

21 பைக்.. ரூ.6 லட்சம் மதிப்பு.. ஜெயங்கொண்டத்தில் சிக்கிய பலே திருடன்

உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்து பறவைகளை வேட்டையாடிய 3 பேர் அரியலூரில் கைது

ஸ்ரீபுரந்தான் பெரியநாயகி சமேத உடனுறை பிரகதீஸ்வரர் கோவில் ஆருத்ரா தரிசனம்..!

நகை, பணத்துக்காக முதியவர் அடித்துக் கொலை.. அரியலூரில் மர்ம நபர்கள் வெறிச்செயல்..

பஸ் ஓட்டிக்கொண்டே செல்போனுக்கு சார்ஜ்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 52 பேர் காயம்

முந்திரிக்காடு வீட்டில் சிறுமியை 10 நாட்கள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்: தாயும் உடந்தையாக இருந்தது அம்பலம்!

இந்நிலையில் சிலால் கிராமத்தில் வாகன சோதனையின்போது துணி கழிவு மூட்டைகளுக்கு கீழே பதுக்கி கடத்தி வரப்பட்ட குட்கா முட்டைகள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய லாரி டிரைவர் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் பகுதியை சேர்ந்த  ஜெகதீஸ்வரன், கும்பகோணம் ராமசாமி தெரு சரவணன் , கும்பகோணம் கும்பேஸ்வரர் வடக்கு வீதியில் வசித்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் வஸ்னாராம் , கும்பகோணம் சாக்கோட்டை பகுதியில்  மகன் அழகர்  ஆகியோரை தா.பழூர் மற்றும் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

Also see... செஸ் ஒலிம்பியாட்:தர்பூசணியில் பிரதமர்,முதல்வர் உருவம்

இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும், இரண்டு குட்கா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவங்களுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியாளர்: கலைவாணன், அரியலூர்

Tags:Ariyalur, Gutka scam, Smuggling

முக்கிய செய்திகள்