மாடி தோட்டம் அமைப்பதை பலரும் விரும்பும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில், தோட்டக்கலை துறையின் மூலம் மானிய விலையில் மாடித் தோட்டம் அமைப்பதற்கான உபகரணங்கள்வழங்கப்படுகின்றன.
தற்போது பலரும் மாடி தோட்ட செயல்முறையை விரும்புகின்றனர். அதாவது தங்களுக்கு தேவையான காய்கறி செடிகள், மூலிகை செடிகள் போன்றவற்றை மாடியில் வைத்து வளர்த்து வருகின்றனர். இந்த மாடி தோட்டமானது நகர்ப்புறங்களிலும் தற்போது அதிக அளவிலான வரவேற்பை பெற்றுள்ளது.
எனவே, பலரும் மூலிகை செடிகளையும் மாடி தோட்டத்தின் மூலம் வளர்த்து பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு தோட்டக்கலை துறை மூலம் மாடித்தோட்ட மூலிகை தொகுப்பை தற்போது மானிய விலையில் வழங்கி வருகிறது.
புதுக்கோட்டையில் கோடைகால சிலம்பம் பயிற்சி.. சிலம்பம் சுற்றி அசத்திய மாணவர்கள்!
‘கலெக்டரே கார் கதவை திறந்துவிட்டார்’ - ஆட்சியர் கவிதா ராமு செயலால் நெகிழ்ந்த டபேதர்!
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பயன் பெறுவது எப்படி?
புதுக்கோட்டையில் மேய்ச்சலுக்கு சென்றபோது கிணற்றில் தவறி விழுந்த ஆடு..
டான்சர்களுக்கு டஃப் கொடுத்த புதுக்கோட்டை முதியவர்.. நடுரோட்டில் வேற லெவல் ஆட்டம்..
வாழ்க்கையில் பிரச்சனைகள் நீங்க வடக்கு நோக்கிய இந்த அம்மனை வழிபடுங்கள்.. புதுக்கோட்டை பக்தர்களின் நம்பிக்கை!
வருமானத்திற்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்துகள்... விஜயபாஸ்கருக்கு எதிராக குற்றப்பத்திரிகை..!
புதுக்கோட்டையில் விவசாயிகள் விழிப்புணர்வு முகாம்.. அறிவுரைகள் வழங்கிய அதிகாரிகள்!
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு நாள் கூட்டம்..
புதுக்கோட்டை பாப்பான்விடுதியில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு!
96 பட பாணியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.. புதுக்கோட்டையில் நெகிழ்ச்சி சம்பவம்!
இந்த தொகுப்பினை அனைவருமே பெற்றுக் கொள்ளலாம். அதாவது அருகில் இருக்கும் தோட்டக்கலைத் துறை அலுவலகங்களிலும், உழவன் செயலி மூலமாக பதிவு செய்தும் இந்த தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம்.
மானிய விலையில் வழங்கப்படும் மூலிகை மாடி தோட்ட தொகுப்பில் 10 குரோபேக்குகள், 20 கிலோ தேங்காய் நார் கட்டிகள், 4 கிலோ மண்புழு உரம், அத்துடன் 10 மூலிகை செடிகள் தொகுப்பாக வழங்கப்படுகிறது. இந்த மாடி தோட்ட மூலிகை தொகுப்பின் மொத்த விலை 1,500 அதில் 750 அரசின் மானியமாகவும், வாங்குபவர்களின் பங்கு தொகையாக 750 ரூபாயும் உள்ளது.
இந்த மாடி தோட்டம் மூலிகை தலை தொகுப்பினை வாங்கிய புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்த பெண் புவனேஸ்வரி பேசுகையில், இந்த தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அதாவது ஒவ்வொரு பொருளையும் வெளியே வாங்கினால் தனித்தனியாக வாங்க வேண்டிய தேவை இருக்கும். ஆனால், இது தொகுப்பாக மொத்தமாக ஒரே இடத்தில் கிடைப்பதனால் போக்குவரத்து செலவினங்களும் எங்களுக்கு மிச்சம் ஆகிறது. மேலும், மாடித்தோட்டத்தில் காய்கறி செடிகளோடு இந்த மூலிகை தொகுப்பையும் வளர்ப்பது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Agriculture, Local News, Pudukkottai